செய்திகள் :

'இந்த' செய்கைகளும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தான் - நீதிமன்றம் தீர்ப்பு

post image

இன்னும் பலருக்கும் பாலியல் தொந்தரவுகளுக்கான வரையறைகள் என்னவென்று தெரிவதில்லை.

ஒரு பெண்ணிடம் ஆபாசமாகப் பேசினாலோ, தவறாக நடந்துகொண்டாலோ தான் பாலியல் தொந்தரவுகள் என்று நினைக்கப்படுகின்றன.

ஆனால், உண்மையில் பெண்ணிற்கு அசௌகரியம் தரும் வகையில் பார்த்தால் கூட அது பாலியல் தொந்தரவு தான்.

இதை மீண்டும் ஒரு வழக்கில் உறுதி செய்துள்ளது சண்டிகர் மாவட்ட நீதிமன்றம்.

நீதிமன்றம்
நீதிமன்றம்

அந்த வழக்கு என்ன?

2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி, பெண் ஒருவர் அவரது வீட்டிற்கு வெளியே பெருக்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது 62 வயதுள்ள குற்றம் சாட்டப்பட்ட நபர் அந்தப் பெண்ணின் மீது 500 ரூபாய் நோட்டை வீசி உள்ளார். மேலும், கண் அடிப்பது, ஃபிளையிங் கிஸ் தருவது போன்ற செய்கைகளையும் செய்துள்ளார்.

அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் போதையில் இருந்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளிக்க, வழக்கு பதிவாகியுள்ளது.

தீர்ப்பு என்ன?

இந்த வழக்கை விசாரித்த சண்டிகர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் (Chief Judicial Magistrate) சச்சின் யாதவ், "பெண்ணின் தனிப்பட்ட கண்ணியத்தைக் குலைக்கும் வார்த்தை அல்லாத எந்தச் செயலும் பாலியல் தொந்தரவே. இதில் ஃப்ளையிங் கிஸ், கண் அடிப்பது ஆகியவையும் அடங்கும்" என்று தீர்ப்பளித்துள்ளார்.

சத்தீஷ்கர்: பிரேக் அப்பில் முடிந்த இன்ஸ்டா காதல்; போனை பிளாக் செய்த காதலனை குத்திக் கொன்ற காதலி

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூர் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் காம்தா பிரசாத்(25). அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.பிரசாத்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரோஷ்னி(22) என்ற பெண்ணின் அறிமுகம் ... மேலும் பார்க்க

தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்!

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கூவக்கரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான வெள்ளியங்கிரி. கூலித்தொழிலாளியான இவர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்திர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - என்ன நடந்தது?

மகாராஷ்டிராவில் வரும் 5-ம் தேதி பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேண்டியிட விரும்புபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு

காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.விழா காலங்கள் ... மேலும் பார்க்க

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த... மேலும் பார்க்க

நெல்லை: திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன?

நெல்லை, பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான... மேலும் பார்க்க