செய்திகள் :

கரூர் சம்பவம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரிடம் சி.பி.ஐ விசாரணை

post image

கடந்த இரண்டு நாட்களாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைச்செயலாளர் நிர்மல் குமார், தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் உள்ளிட்டோர் சி.பி.ஐ அதிகாரிகள் முன் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

இந் நிலையில், நேற்று கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் ஆஜராகினார்.

கடந்த இரண்டு நாள் விசாரணையில் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜரான நிலையில், அவர்கள் அளித்த ஆவணங்கள் மற்றும் வாக்குமூலம் அடிப்படையில் தான், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் நேற்று சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜரானார் என்று சொல்லப்படுகிறது.

கரூர் விசாரணை
கரூர் விசாரணை

இந்த விசாரணையின் போது, த.வெ.க தலைவர் விஜய் வருகைக்கு முன்னர், கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் எவ்வளவு மக்கள் கூடியிருந்தனர், த.வெ.க தலைவர் விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் எவ்வளவு பேர் வருகை தந்தனர், கூட்டம் அதிகமாக இருப்பதால் விஜயை காவல்துறை ஏன் நிறுத்தவில்லை?, கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர என்ன நடவடிக்கை காவல்துறை மேற்கொண்டது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை உயர் அதிகாரிகள் என்ன உத்தரவு பிறப்பித்தார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சி.பி.ஐ அதிகாரிகள் கரூர் நகர காவல் ஆய்வாளரிடம் எழுப்பியதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், கரூர் வேலுசாமிபுரம் பகுதிக்கு த.வெ.க தலைவர் விஜய் வருகைக்கு முன்னர் தடியடி நடத்தப்பட்டது, முதல் தகவல் காவல்துறை பதிந்த உடன் ஏன் பிரேத பரிசோதனை அவசர அவசரமாக நடத்தப்பட்டது ஏன் என நேற்றைய சி.பி.ஐ விசாரணையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் எழுப்பிய சந்தேகங்கள் அடிப்படையிலும், இன்று கரூர் நகர காவல் ஆய்வாளரிடம் சி.பி.ஐ விசாரணையை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், சம்பவத்தன்று சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட சிலரையும் விசாரணைக்காக சி.பி.ஐ அதிகாரிகள் இன்று ஆஜராக சமன் அனுப்பியதன் அடிப்படையில், 4 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

கரூர் துயர சம்பவம்
கரூர் துயர சம்பவம்

இவர்களில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியின் பிரமுகர் ராகுல் காந்தி, த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டது தொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் சமன் அளித்து விசாரணைக்கு இன்று ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

அதோடு, கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோகுல கண்ணன் என்பவர் முகநூல் பக்கத்தில் த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கருத்து பதிவிட்டதாகவும், அதன் அடிப்படையில் சி.பி.ஐ சம்மன் அனுப்பியதாக, இன்று விசாரணைக்காக ஆஜராகினார்.

இதே போல, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஓடுவாந்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் நவலடி என்பவர், த.வெ.க கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற அன்று தமிழக காவல்துறையின் அவசர உதவி எண் 100 எண்ணுக்கு அழைத்து, சம்பவம் குறித்து விசாரணை செய்ததாக, சி.பி.ஐ சம்மன் அளித்து இன்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

சி.பி.ஐ விசாரணை
சி.பி.ஐ விசாரணை

இது தவிர, கரூரை சேர்ந்த டெக்ஸ்டைல் தொழில் அதிபர் ஒருவர் சி.பி.ஐ விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். நேற்று ஒரே நாளில் சி.பி.ஐ விசாரணைக்கு கரூர் நகர காவல் ஆய்வாளர் உள்ளிட்ட ஐந்து பேர் சி.பி.ஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து நேரில் ஆஜராகினர்.

இதில், கரூர் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் இரண்டாவது முறையாக சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியிருப்பது குறிப்பிடத்தக்கது. கரூர் நெரிசல் பலி சம்பவ சி.பி.ஐ விசாரணைக்காக அடுத்தடுத்து பலரும் ஆஜராகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் மீறிய உறவு; பெண்ணைக் கொன்றுவிட்டு போலீஸில் சரணடைந்த நபர் - ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

ராமேஸ்வரம் ராமர்பாதம் செல்லும் வழியில் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை உள்ளது. இங்கு காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கார்மேகம் என்பவர் தற்போது தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த ... மேலும் பார்க்க

கரூர்: வங்கி மேலாளரை மிரட்டி பணம் பறிப்பு; திமுக பிரமுகரைக் கைதுசெய்த போலீஸார்!

திருச்சி, அகிலாண்டபுரம் தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் சிவா (வயது: 33). இவர், குளித்தலை காவல் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தனியார் வங்கியின் கிளையில் மேலாளராக வேலை பார்த்து வருக... மேலும் பார்க்க

கோவில்பட்டி: குடும்பத் தகராறு; டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம். இவர்கள் 2 பேரும் தளவாய்புரம் பகுதியிலுள்ள மதுபானக் கூடத்தில் மது அருந... மேலும் பார்க்க

மும்பை: சூட்கேஸில் இருந்த 22 வயது பெண்ணின் சடலம்; 50 வயது லிவ்-இன் பார்ட்னர் சிக்கியது எப்படி?

மும்பை அருகில் உள்ள ஷில் தைகர் கழிமுகப்பகுதியில் பாலத்திற்குக் கீழே டிராலி பேக் ஒன்று கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விரைந்து வந்து அந்தப் பேக்கைப்... மேலும் பார்க்க

சென்னை: `உங்க தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்துட்டாரு’ - கணவரைக் கொன்று நாடகமாடிய மனைவி சிக்கினார்

சென்னை, கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா நகர் 2-வது தெருவில் குடியிருந்தவர் மணிகண்டன் (34). இவர், சொந்தமாக கார் வைத்து சில நிறுவனங்களுக்கு ஓட்டி வந்தார். இவரின் மனைவி சரண்யா. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனு... மேலும் பார்க்க

வேலூர்: பெண் சிசுவை கால்வாயில் வீசிய தந்தை, பாட்டி கைது; நல்லடக்கம் செய்த போலீஸ் - நடந்தது என்ன?

வேலூர் அரசு `பென்ட்லேண்ட்’ பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில், நேற்று முன்தினம், பச்சிளம் பெண் சிசுவின் சடலம் மிதந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொது மக்கள் அதிர்ச்சியட... மேலும் பார்க்க