செய்திகள் :

காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த நர்சிங் மாணவி - பெங்களூருவில் அதிர்ச்சி

post image

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் இது முற்றிலும் பொய்யான புகார் என்பது தெரியவந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த 22 வயதான நர்சிங் மாணவி ஒருவர் பெங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 6-ம் தேதி மடிவாலா காவல் நிலையத்தில் ஒரு புகாரை அளிக்கிறார்.

அதில், "டிசம்பர் 2ஆம் தேதி இரவு சர் எம். விஸ்வேஸ்வரய்யா முனையத்திற்கு அருகே, கார் ஓட்டுநர் ஒருவரும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து என்னை காருக்குள் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்" என்று புகார் அளிக்கிறார்.

whatsapp

இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து,பெங்களூருவில் வசிக்கும் 33 வயதான கார் ஓட்டுநரை கைது செய்கின்றனர். இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அந்த ஓட்டுநர், குற்றம் செய்யவில்லை என மறுக்கிறார்.

வழக்கை விசாரித்த போலீஸார் சம்பவம் நடந்ததாக கூறப்படும் ரயில் நிலையப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் போலீஸாருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

டிசம்பர் 2-ம் தேதி இரவு 11:30 மணி முதல் மறுநாள் காலை 5:30 மணி வரை, அந்த மாணவியும் கார் ஓட்டுநரும் ரயில் நிலையத்தில் ஒன்றாகச் சுற்றித் திரிந்தது பதிவாகியிருந்தது. மாணவி குறிப்பிட்டது போல எந்தவொரு 'கும்பலும்' அங்கு வரவில்லை. மாறாக இருவரும் இணக்கமாகப் பேசிச் சிரித்தபடியே காரில் ஏறுவதும், இறங்குவதும் காட்சிகளில் இருந்திருக்கிறது.

மேலும் ஓட்டுநரின் செல்போனை ஆய்வு செய்தபோது சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளுக்குப் பிறகும் அந்த மாணவி ஓட்டுநருக்கு இயல்பாக மேசேஜ்களை அனுப்பியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆதாரங்களுடன் போலீஸார் மாணவியை விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்று இரவு அவர் கார் ஓட்டுநருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் அவரது கழுத்தில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

கேரளாவிற்குச் சென்ற பிறகு, இந்தக் காயங்களைப் பார்த்த அவரது காதலன் "இது எப்படி வந்தது?" என்று கேள்வி கேட்டுள்ளார். காதலனிடம் உண்மையைச் சொல்ல பயந்த அந்த மாணவி, காயங்களுக்குக் காரணம் பாலியல் வன்கொடுமைதான் என்று பொய் சொல்லி, நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

சாத்தூர்: SI-யின் மனைவி தற்கொலையில் சந்தேகம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் அருண் (28). இவர் சாத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த இளவரசியை மூன்று ஆண்டுகளு... மேலும் பார்க்க

ஊட்டி: மூடப்பட்ட Hindustan Photo Films தொழிற்சாலையில் மண் திருட்டு; தொடரும் அத்துமீறல்; காரணம் என்ன?

தென்னாசியாவின் முதல் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 1960-ம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது. அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை சுமார் 350 ஏக்கர் பரப்பளவுள்ள வன... மேலும் பார்க்க

`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' - அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வ... மேலும் பார்க்க

``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலை... மேலும் பார்க்க

``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ர... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த தந்தை - ராமநாதபுரத்தில் சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்ள மோட்டார் மின் சுவிட்சினை பழுது பார்த்து... மேலும் பார்க்க