செய்திகள் :

குஜராத்: கணவனைக் கொன்று கிட்சனில் புதைத்த மனைவி; அதன்மீது நின்று தினமும் சமைத்ததாக பகீர் வாக்குமூலம்

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சர்கேஜ் என்ற இடத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர் மொகமத் இஸ்ரேயல். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மொகமத் கொத்தனார் வேலை செய்து வந்தார்.

திடீரென கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மொகமத் காணாமல் போய்விட்டார். அவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மொகமத் வீட்டிற்குச் சென்று போலீஸார் விசாரித்தனர். மொகமத் மனைவி ரூபிக்கு இம்ரான் வகேலா என்பவருடன் தொடர்பு இருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து இம்ரான் வகேலாவைப் பிடித்துச்சென்று விசாரித்தபோது மொகமத்தைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வகேலாவிடம் மேற்கொண்டு விசாரித்த போது ரூபியும், வகேலாவும் சேர்ந்து மொகமத்தைக் கொலை செய்து அவர்கள் வசித்த அதே வீட்டு சமையல் அறையில் புதைத்திருந்தது தெரிய வந்தது.

கொலை
கொலை

சமையல் அறையில் புதைத்துவிட்டு அதன் மீது சிமெண்ட் போட்டு டைல்ஸ் பதித்து இருந்தனர். அதன் பிறகு அதே சமையல் அறையில்தான் ரூபி கடந்த ஒரு வருடமாக சமையல் செய்து சாப்பிட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து நீதிபதி முன்னிலையில் சமையல் அறையைத் தோண்டி மொகமத் சடலம் எடுக்கப்பட்டது. உடலில் எஞ்சி இருந்த எலும்புகள், முடிகள் மட்டும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. ரூபியும், அவரது காதலனும் கைது செய்யப்பட்டனர்.

வகேலா, ரூபி(மேலே), கைதான நண்பர்கள்(கீழே)
வகேலா, ரூபி(மேலே), கைதான நண்பர்கள்(கீழே)

இது குறித்து ரூபியிடம் விசாரித்த போது, ரூபியும், அவரது கணவரும் கடந்த 5 ஆண்டுகளாக இரண்டு குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தனர். கணவர் மொகமத்துடன் வேலை செய்த வகேலாவுடன் ரூபிக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இத்தொடர்பு மொகமத்திற்குத் தெரிய வந்ததால் ரூபியை மொகமத் அடித்து உதைத்துள்ளார். அதனைத் தொடர்ந்தே ரூபியும், அவரது காதலனும் சேர்ந்து இரவில் மொகமத் கழுத்தை அறுத்து கொலை செய்து சமையல் அறையில் புதைத்ததாக ரூபி தெரிவித்துள்ளார். உடலைப் புதைக்க உதவிய இரண்டு பேரும் பிடிபட்டுள்ளனர்.

லிவ் இன் பார்ட்னர் படுகொலை

இதே போன்று சூரத்தில் திருமணம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய பெண்ணைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து ரோட்டில் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சூரத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொசம்பா என்ற இடத்தில் சூட்கேஸ் ஒன்று ரயில்வே மேம்பாலம் அருகில் கிடந்தது. அதனைத் திறந்து பார்த்தபோது பெண் ஒருவரின் உடல் இருந்தது. போலீஸார் நடத்திய விசாரணையில் அப்பெண்ணின் காஜல் (22) என்று தெரிய வந்தது. அவரை ரவி சர்மா என்பவர் கொலை செய்திருந்தார்.

போலீஸாரின் விசாரணையில் ரவியும், காஜலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் நண்பர்களாகி இருக்கின்றனர். காஜலுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காஜல் டெல்லிக்குச் சென்றார். அங்குதான் ரவி சர்மாவும் ஹோட்டலில் வேலை செய்து வந்தார். இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டிருந்த நிலையில் தன்னைத் திருமணம் செய்யும்படி காஜல் நிர்ப்பந்தம் செய்து வந்துள்ளார்.

கொலை
கொலை

இதனால் ரவி சர்மா குஜராத் மாநிலம் கொசம்பாவிற்கு வந்தார். அங்கு வந்த பிறகு காஜல் நம்பரை ரவி பிளாக் செய்துவிட்டார். ஆனால் ரவியின் நண்பர்கள் மூலம் அவரைத் தொடர்பு கொண்ட காஜல் தன்னைத் திருமணம் செய்யவில்லையெனில் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக போலீஸில் புகார் செய்வேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து ரவியின் நண்பர்கள் அவர் இருக்கும் இடத்தைத் தெரிவித்தனர். உடனே காஜல் தனது குழந்தையுடன் கொசம்பாவிற்கு வந்து ரவியுடன் சில நாட்கள் தங்கி இருந்தார்.

இங்கு வந்த பிறகும் அடிக்கடி தன்னைத் திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் காஜலை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ரவி போலீஸில் தெரிவித்துள்ளார்.

கொலை செய்தபோது காஜல் மகன் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரூ.800க்கு டிராலி பேக் ஒன்று வாங்கி வந்து அதில் உடலை அடைத்து அங்குள்ள ரயில்வே பாலத்திற்கு அருகில் போட்டுவிட்டு காஜலின் மகனை அழைத்துக்கொண்டு, பரிதாபாத் சென்று தனது நண்பர் வீட்டில் ரவி வசித்து வந்துள்ளார். அவரைக் கண்டுபிடித்து போலீஸார் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

`பள்ளி, கல்லூரி மாணவர்களே டார்கெட்' - ஊட்டியில் சிக்கிய ஒடிசா கஞ்சா வியாபாரி!

மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தது வருகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக புகார்; ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவர், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகளில் பெண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவர... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரை கிணற்றில் வீசி மறைத்ததாக இருவர் கைது - சாத்தூரில் துயரம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோயிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31 ஆம் தேதி இரவு சென்றுள்ளார்.இ... மேலும் பார்க்க

Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety

கோவையில் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிரு... மேலும் பார்க்க

Dialysis செய்தவருக்கு HIV தொற்று ரத்தம்; உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவரின் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) இரண்டு சிறுநீரகங்களும் 2011 ஆம் ஆண்டு செயலிழந்துள்ளன. கணவரின் பராமரிப்பில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ... மேலும் பார்க்க