செய்திகள் :

கேரளா: உள்ளாட்சித் தேர்தலில் சீட் தர பா.ஜ.க மறுப்பு; உயிரை மாய்த்த ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்

post image

கேரளாவில் டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டிசம்பர் 13 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க-வில் தனக்கு சீட் வழங்கப்படாததால், ஆர்.எஸ்.எஸ். செயற்பாட்டாளர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா உள்ளாட்சித் தேர்தல்
கேரளா உள்ளாட்சித் தேர்தல்

காவல்துறை தரப்பில் வெளியான தகவலின்படி, திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் கே. தம்பி நேற்று மாலை (நவம்பர் 15) தனது வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டார்.

திருவனந்தபுரத்தில் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் ஏமாற்றமடைந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், பா.ஜ.க. உள்ளூர் தலைவர்கள் தரப்பில், ஆனந்த் கே. தம்பி சீட் கேட்டு தங்களை ஒருபோதும் அணுகவில்லை என்றும், அவரது மரணத்தையும் சீட் மறுக்கப்பட்டதையும் தொடர்புபடுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஆனந்த் கே. தம்பி பா.ஜ.க.வில் தனக்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக சமூக வலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.

மேலும், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தலைவர்களைக் குற்றம்சாட்டி சனிக்கிழமை மதியம் தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார்.

அதில், மணல் கடத்தல் மாஃபியாவுடன் தொடர்புடைய சில உள்ளூர் தலைவர்களின் நலன்களுக்காக தனக்கு சீட் மறுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

(ஆனந்த் கே.தம்பி) Anand K Thampi
(ஆனந்த் கே.தம்பி) Anand K Thampi

ஆனால், அவர் சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்ததால், அவரின் நண்பர்கள் அவரை விலகியிருக்கத் தொடங்கினர். இதனால் வருத்தமடைந்த ஆனந்த் கே. தம்பி, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதையறிந்து அவரது வீட்டுக்கு விரைந்த நண்பர்கள், தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும் அவர் உயிரிழந்தார்.

இந்த விவகாரத்தில், பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் “அவரின் தற்கொலைக்கும், சீட் மறுக்கப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறி வருவதால், போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுசீந்திரம்: தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளம் சுவர் இடிந்து விழ என்ன காரணம்? வல்லுநர்கள் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற தாணுமாலய சுவாமி கோயில் தெப்பக்குளத்தை ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி சீரமைக்க கடந்த மார்ச் 2-ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது.செப்டம... மேலும் பார்க்க

S.I.R : 'BLO -க்களை திமுக கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது!' - தவெக ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தா சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமைய... மேலும் பார்க்க

TVK: ``காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படும் தவெக தொண்டர்கள்?'' - குற்றஞ்சாட்டும் மா.செக்கள்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தம் சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்ல தவெக தொண்டர்களை அனுமதிக்க மறுப்பதாக குற்றஞ்சா... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: `மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்' - ஆட்சியர் எச்சரிக்கை

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு இன்று `ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக புதுச்சேரி அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான கு... மேலும் பார்க்க

காரைக்குடி: ``ரீல்ஸ் முக்கால்வாசி பொய்தான், கல்விதான் ரியல்'' - பள்ளி விழாவில் உதயநிதி அறிவுரை

சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளு... மேலும் பார்க்க

``பீகார் தேர்தல்; பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?'' - திருமாவளவன் விமர்சனம்

"பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது." என்று பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து குற்றம்சா... மேலும் பார்க்க