செய்திகள் :

சத்தீஷ்கர்: பிரேக் அப்பில் முடிந்த இன்ஸ்டா காதல்; போனை பிளாக் செய்த காதலனை குத்திக் கொன்ற காதலி

post image

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஷ்பூர் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் காம்தா பிரசாத்(25). அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார்.

பிரசாத்திற்கு இன்ஸ்டாகிராம் மூலம் ரோஷ்னி(22) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பிரசாத் தனது காதலியின் போன் அழைப்புகளையும், மெசேஜ்களையும் தவிர்த்து வந்தார்.

அதோடு தனது காதலியின் போன் நம்பரை தனது போனில் பிளாக் செய்துவிட்டார். இதையடுத்து பிரசாத் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக ரோஷ்னி நினைத்தார். எனவே கோபத்தில் தனது காதலன் வீட்டிற்கு கத்தியுடன் ரோஷ்னி சென்றார்.

கைது
கைது

அங்கு சென்று காதலன் வீட்டுக் கதவைத் தட்டினார். காதலன் கதவைத் திறந்தவுடன் பிரசாத்திடம் போனைக் கொடுக்கும்படி ரோஷ்னி கேட்டார். ஆனால் பிரசாத் போனைக் கொடுக்க முடியாது என்று தெரிவித்தார் .

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரோஷ்னி, தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பிரசாத்தின் நெஞ்சில் குத்தினார். அவர் சத்தம் போட்டு தரையில் விழுந்தார். அவர்களது சத்தத்தைக் கேட்டு பிரசாத்துடன் தங்கி இருப்பவர்கள் ஓடி வந்தபோது பிரசாத் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார்.

நண்பர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் பிரசாத் இறந்து போனார். இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரோஷ்னியைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸார் ரோஷ்னியிடம் விசாரித்தபோது காதலனை மிரட்டுவதற்காகத்தான் கத்தியை எடுத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க