SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' -...
டெல்லி: இதை கழுத்தில் மாட்டிக்கொண்டால் காற்று மாசு அண்டாதா? - அறிவியலாளர்கள் சொல்வதென்ன?
Qஇந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள சிறிய ரக சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அட்டோவியோ நிறுவனம், இந்தியாவின் முதல் கையடக்க காற்று சுத்திகரிப்பானைக் கண்டுபிடித்திருக்கிறது. இதனை அட்டோவியோ பெபல் என அழைக்கின்றனர்.
டெல்லியின் காற்றுமாசினால் நீண்டகால நோக்கில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக் கூடும் என்ற அச்சம் மக்களிடத்தில் அதிகரித்திருப்பதனால், கடந்த சில வாரங்களாக இந்த கருவிக்கு டிமாண்ட் அதிகரித்திருக்கிறது.
கழுத்தில் அணிகலனாக அணிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இதனை, கடந்த டிசம்பரில் அறிமுகம் செய்துள்ளனர். இதுவரை 15,000க்கும் மேற்பட்டோர் வாங்கியிருக்கின்றனர்.

சிறிய கருவி VS டெல்லியின் நச்சுக்காற்று
அட்டோவியோ, ஹரியானா மாநிலம் குருகிராமை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். இதன் 3 நிறுவனர்களில் ஒருவரான அன்மய் ஷாலோட் கூறுவதன்படி மொத்த விற்பனையில் 30-35% கடந்த சில வாரங்களில் வந்துள்ளது. குறிப்பாக டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் வாங்கியிருக்கின்றனர்.
பாரம்பரிய காற்று சுத்திகரிப்பான்கள் இருந்தாலும், செல்லும் இடமெல்லாம் எடுத்துச் செல்ல முடிவதனாலும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது எளிமையாக இருப்பதனாலும் இதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் விலை ரூ.3500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பெபெலை 1000 மணி நேரம் வரை பயன்படுத்தமுடியும் என்கின்றனர்.
இதை வைத்து ஒரு நபர் சுவாசிக்கும் காற்றை மட்டுமே சுத்திகரிக்க முடியும். இருசக்கர வாகனத்தில் அல்லது நடந்து செல்லும்போது புதிய காற்று வந்துக்கொண்டே இருப்பதனால் இதனால் பெரிய அளவில் பலன் கிடைக்காது.
ஒரு அறை முழுமைக்கும் காற்றை சுத்திகரிக்க இதை விட பாரம்பரிய சுத்திகரிப்பான்கள் சிறப்பாக செயல்படும். எனவே வெளியில் அலுவலகத்துக்கோ, பிற இடங்களுக்கோ செல்லும்போதே இது திறன்மிக்கதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதில் மேம்பட்ட மாறி அயனி தொழில்நுட்பம் (Advanced Variable Anion Technology) பயன்படுத்தப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது. இது காற்றில் உள்ள PM2.5, PM10, பாக்டீரியா மற்றும் பிற நானோ துகள்கள் போன்ற மாசுபடுத்திகளை அழிக்கிறது. இது பாரம்பரிய HEPA (High Efficiency Particulate Air) சுத்திகரிப்பான்களைவிட மேம்பட்ட முறை என்கின்றனர்.
இதனை கான்பூர் ஐஐடியில் சோதித்து இந்தியாவின் தீவிர காற்றுமாசுபாட்டை நிவர்த்தி செய்யும் கருவியாக நிறுவியிருக்கின்றனர். இதில் நார்மல் மற்றும் டர்போ என இரண்டு நிலைகள் கொடுத்திருக்கின்றனர். காற்றின் தரக் குறியீடு 200ஐத் தாண்டும்போது டர்போ பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அன்மய் ஷாலோட்.
ஆனால் அறிஞர்கள் இந்த கூற்றுகளை சந்தேகிக்கின்றனர். நிறுவனம் கொடுத்திருக்கும் அடிப்படை சோதனை முடிவுகளைக் கொண்டு இவை N95 மாஸ்க் போன்றவற்றை விட திறன்மிக்கதாக இருக்கும் எனக் கூறிவிட முடியாது என்கிறது இந்தியா டுடே தளம்.

மேலும் இந்த சாதனம் புகை போன்ற பெரிய துகள்களைக் கட்டுப்படுத்தினாலும் பெருநகரங்களின் நுண்ணிய மாசுக்கு எதிராக பலவீனமானதாகவே இருக்கும் எனக் கருதுகின்றனர் அறிவியலாளர்கள். இதுபோன்ற கருவிகள் 1 - 10 மைக்ரோ மீட்டர் துகள்களை கட்டுப்படுத்த சிறந்தவை. ஆனால் அபாயகரமான மாசு துகள்கள் பொதுவாக 0.1 மைக்ரோ மீட்டரை விட சிறியதாக இருக்கும் என்கின்றனர் அறிஞர்கள். என்95 முகமூடி அணிவதும் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்வதும் சிறந்த தீர்வாக இருக்கும் என நம்புகின்றனர்.
டெல்லியில் உச்சக்கட்ட புகை மூட்டப் பருவத்தில் இந்த கருவி சிறிய அளவில் பயனளிக்கலாம் என்பதையும் மறுக்கவில்லை.

















