செய்திகள் :

டெல்லி கார் வெடிப்பு: ``படித்தவர்களையும் தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை?" - பா. சிதம்பரம் கேள்வி

post image

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் சில தினங்களுக்கு முன்பு 2,563 கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் அடில் ரத்தேர், முசம்மில், ஷாஹீன் ஷாஹித் என்ற பெண் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த நிலையில்தான் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் மாலை கார் வெடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், இந்தியாவின் தலைநகர், குறிப்பாக அதி உயர் பாதுகாப்புப் பகுதியான செங்கோட்டை பகுதியில் எப்படி அந்த கார் ஊடுருவ முடிந்தது?

டெல்லி துயரச் சம்பவம்
டெல்லி துயரச் சம்பவம்

இந்த சம்பவம் நடந்து முடியும்வரை உளவுத்துறை என்ன செய்துகொண்டிருந்தது? இந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு? போன்றக் கேள்விகளை மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை நோக்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், ``பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னும் பின்னும், நான் இரண்டு வகையான தீவிரவாதிகள் இருப்பதாகத் தொடர்ந்து கூறி வருகிறேன். வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற ஊடுருவிய தீவிரவாதிகள் மற்றும் உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள்.

ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிய விவாதத்தின்போது நாடாளுமன்றத்தில் நான் இதைத் தெரிவித்தேன்.

உள்நாட்டில் உருவான தீவிரவாதிகள் என்ற எனது கருத்தைக் குறிப்பிட்டதற்காக நான் கேலி செய்யப்பட்டு, இணையத்தில் வசைபாடப்பட்டேன்.

எனினும், அரசாங்கம் இதைப் பற்றி மிகவும் மௌனம் காத்தது என்று நான் சொல்லியாக வேண்டும்.

பா. சிதம்பரம்
பா. சிதம்பரம்

ஏனெனில், உள்நாட்டில் உருவான தீவிரவாதிகளும் இருக்கிறார்கள் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும்.

இந்தப் பதிவின் நோக்கம், இந்தியக் குடிமக்களை படித்தவர்களையும் கூட தீவிரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்னென்ன என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மோதிக்கொள்ளும் பெருசுகள்; நொந்துகொள்ளும் காவி இளசுகள் டு வசூலுக்குத் தயாராகும் எம்.பி! | கழுகார்

கொதிக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்!“அவர்கள்மீது அப்படியென்ன பாசமோ?”மதுரையில், இலைக் கட்சியின் பூத் கமிட்டிப் பயிற்சி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இலைக் கட்சியின் ‘சூரிய’ மாஜி, “நமது தல... மேலும் பார்க்க

US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!

அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு... மேலும் பார்க்க

Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த சம்பவத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கடந்துவிட்டன. இதில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர்.தற்போது கூட்ட நெரிசல் மிக்க சாலையில் வெள்ளை நிற ஐ20 கா... மேலும் பார்க்க

SIR FAQ #5: பென்சிலில் Enumeration Form எழுத வேண்டுமா? | Decode | Vikatan

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் நடைபெறும் SIR குறித்து மக்களுக்கு அடிக்கடி வரும் முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் தரப்படுகின்றன.வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வெளிநாட்டில் உள்ளவர்... மேலும் பார்க்க

9% அதிகரித்த வாக்குப்பதிவு; `பீகார் தேர்தல் பேட்டர்ன்’ மீண்டும் பலிக்குமா? வரலாறு சொல்வது என்ன?

பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு பின்னான கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 150 - 170... மேலும் பார்க்க

``பெண்கள் தைரியமாக புகாரளிப்பதால் பாலியல் வழக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது'' - அமைச்சர் கீதாஜீவன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சமூ... மேலும் பார்க்க