செய்திகள் :

தர்மேந்திராவுக்கு இரங்கல் கூட்டம்: ஒட்டுமொத்த பாலிவுட் பங்கேற்பு; தவிர்த்த மனைவி ஹேமாமாலினி, மகள்கள்

post image

கடந்த வாரம் மறைந்த பாலிவுட் நடிகர் தர்மேந்திராவிற்காக அவரது குடும்பத்தினர் மும்பையில் பிரார்த்தனை மற்றும் இரங்கல் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். முதல் மனைவியின் குடும்பத்தினர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். தாஜ் லேண்ட்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நடிகர் அபிஷேக் பச்சன், தனது மனைவி ஐஸ்வர்யா ராயுடன் ஒன்றாக வந்து கலந்து கொண்டார். நடிகர்கள் சல்மான் கான், ஆர்யன் கான், சுனில் ஷெட்டி, ரேகா, சோஹா அலி கான், அமீஷா பட்டேல், ஜாக்கி ஷெராஃப், சித்தார்த் மல்ஹோத்ரா, வித்யா பாலன், சித்தார்த் ராய் கபூர், ஆதித்யா ராய் கபூர், நேஹா தூபியா, அங்கத் பேடி, பூஜா ஹெக்டே, நிம்ரத் கவுர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தர்மேந்திராவின் குடும்ப உறுப்பினர்களான சன்னி தியோல், பாபி தியோல், கரண் தியோல் மற்றும் அபய் தியோல் ஆகியோர் கலந்து கொண்டு வந்திருந்தவர்களை வரவேற்றனர்.

பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு
பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்பு

ஆனால் இதில் தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி ஹேமா மாலினி மற்றும் அவரது இரண்டு மகள்கள் இந்த இரங்கல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

பிரார்த்தனை கூட்டம் முடிந்த பிறகு நடிகை மஹிமா சவுத்ரி, கோவிந்தாவின் மனைவி சுனிதா அஹுஜா மற்றும் மகன் யஷ்வர்தன் அஹுஜா ஆகியோர் ஹேமா மாலினியின் இல்லத்திற்கு சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

இதேபோன்று, தாஜ் லேண்ட் ஹோட்டல் நிகழ்வுக்கு பிறகு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஹேமா மாலினியின் இல்லத்திற்கு சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

முன்னதாக, ஹேமா மாலினி தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.

அதோடு, தனது கணவர் தான் தனக்கு அனைத்தும் என்று குறிப்பிட்டு நீண்ட பதிவையும் வெளியிட்டிருந்தார்.

தர்மேந்திரா-ஹேமாமாலினி
தர்மேந்திரா-ஹேமாமாலினி

தர்மேந்திரா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் வரை ஹேமா மாலினியுடன் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக தனது முதல் மனைவியின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவர் கடந்த 24ஆம் தேதி வீட்டில் காலமானார்.

அவருக்கு பிரபலங்கள் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தும் முன்பாகவே உடல் இறுதிச்சடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் பாலிவுட் பிரபலங்கள் இடுகாட்டிற்குச் சென்று தான் அஞ்சலி செலுத்தினர்.

குஜராத்: '20 கிலோ எடை; 3 அடி உயரம்' - உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி மருத்துவரான இளைஞரின் பயணம்!

குஜராத் மாநில பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கோர்கி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாரையா(25). மருத்துவம் படித்து முடித்துள்ளார். ஆனால் அவரை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் மறு... மேலும் பார்க்க

`கரும்புத்தோட்டம்தான் இஷ்டம்' வனப்பகுதிக்கு செல்ல மறுக்கிற சிறுத்தைகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே, சோலாப்பூர், சதாரா போன்ற சில மாவட்டங்களில் கரும்பு விளைச்சல் அதிகமாக இருக்கிறது. புனே மாவட்டத்தில் உள்ள ஜுன்னார் தாலுகாவில் அதிக அளவில் விவசாயிகள் கரும்பு விவசாயம் செய்கின... மேலும் பார்க்க

``ஸ்மிருதி மந்தனா திருமண தடை; நான் அவரை காப்பாற்றி உள்ளேன்'' - சாட்டிங் செய்த பெண் சொல்வது என்ன?

உலகக்கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்வதற்கு காரணமாக இருந்த ஸ்மிருதி மந்தனாவிற்கும் அவரது காதலன் பலாஷ் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் மந்... மேலும் பார்க்க

`தூங்கிவிட்டேனாம்’ கேக் வாங்கி சர்ப்ரைஸ் செய்ய நினைத்த கணவன் - வைரலான மனைவியின் `பிறந்தநாள்’ போஸ்ட்

மனைவி மற்றும் காதலியின் பிறந்தநாளை ஞாபகம் வைத்திருக்காத ஆண்கள் பெண்களிடம் கடுமையாக வாங்கிக்கட்டிக்கொள்வது வழக்கம். ஹரியானா மாநிலத்தில் தனது மனைவியின் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து, அதனை கொண்டாட நின... மேலும் பார்க்க

`காலையில் சிறுமி கடத்தல், மாலையில் ரயில் நிலையத்தில் பிச்சை' - பதறிய பெற்றோர்; பகீர் பின்னணி

மும்பையில் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது அல்லது விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதிலும், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் சில டாக்டர்களே நேரடியாக ஈடுபட்டிருப்ப... மேலும் பார்க்க

ஐபோன் பாக்ஸில் மதிய உணவு கொண்டு வந்த மாணவன் - இணையத்தை கலக்கும் வீடியோ!

வட இந்தியாவில் வகுப்பறைக்கு மாணவன் ஒருவன் ஐபோன் பாக்ஸில் மதிய உணவு எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.வழக்கமாக மாணவர்கள் ஸ்டீல் பாக்ஸ் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் மதிய உணவு... மேலும் பார்க்க