செய்திகள் :

தாஜ்மஹால் பயணம்; அமெரிக்க மனைவிக்கு கருப்பின இரட்டையர்களா? வைரல் வீடியோ; உண்மை என்ன?

post image

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரவி வருகிறது. அந்த வீடியோவின்படி அமெரிக்க பெண்மணி ஒருவர் கருப்பின இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதாகவும், அதைக் கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

அப்பெண் இந்தியாவின் தாஜ்மகாலுக்குச் சென்று திரும்பிய பின்னரே இது நிகழ்ந்ததாக ஒரு கதை பரவி வருகிறது. ஆனால், இந்த முழு சம்பவமும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஒரு போலி வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.

AI

வைரலான கதை என்ன?

X மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், மருத்துவமனை அறையில் ஒரு பெண் இரண்டு கருப்பான குழந்தைகளுடன் காணப்படுகிறார், அவரது கணவர் கோபத்துடனும் அதிர்ச்சியுடனும் நிற்கிறார். "என் மனைவி சில மாதங்களுக்கு முன்பு தாஜ்மகாலைப் பார்க்க இந்தியாவிற்குச் சென்றார்" என்று கூறி, தன் மனைவி தன்னை ஏமாற்றிவிட்டதாக கணவர் குற்றம் சாட்டியதாக ஒரு கதை இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டு பரப்பப்பட்டது.​

இந்த வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். வீடியோவில் உள்ள நபர்களின் அசைவுகள் மற்றும் தோற்றம் இயல்புக்கு மாறாக இருப்பதால், இது AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என பலரும் சந்தேகித்தனர்.

இந்த சந்தேகங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 'Grok', இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று அறிவித்துள்ளது.

”இந்த வீடியோ ஒரு டிக்டாக் பக்கத்தில் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட AI-உருவாக்கிய கிளிப் என்றும், தாஜ்மஹால் பயணம் குறித்த கதை, ஒரு கற்பனையே தவிர, உண்மையான சம்பவம் அல்ல" என்றும் அது விளக்கியுள்ளது. AI மூலம் இதுபோன்ற வீடியோக்கள் சித்தரிக்கப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக விரோத கருத்துகளை பரப்புவதற்கு வாய்ப்பிருப்பதால் இதுபோன்ற காணொளிகளை கவனத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ்: ``லவ் ல பேசுறாரா, மிரட்டலில் பேசுறாரா?'' - வீடியோ வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிறிஸ்டில்டா மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த வெள்ளி... மேலும் பார்க்க

நண்பர்களுடன் இருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குமாம் - ஆய்வு சொல்வதென்ன?

எந்தவொரு செயலையும் தனியாக செய்வதை விட, நண்பர்களுடன் சேர்ந்து செய்யும்போது அதிக மகிழ்ச்சியை உணர்வதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக செய்யும் செயல் கூட பிறருடன் சேர்ந்து செய்யும்போது மகிழ்ச்... மேலும் பார்க்க

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் | Photo Album

அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப்பேட்டை.அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி, சென்னை ராயப... மேலும் பார்க்க

பிரிந்து 24 ஆண்டுகள்! தொழில் தொடங்க பணம் கொடுத்த முன்னாள் காதலியை தேடும் சீன காதலர்

சீனாவில் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு கடன் கொடுத்த முன்னாள் காதலியைத் தேட, ஊடக உதவியை நாடியுள்ள சம்பவம் கவனம் பெற்று வருகிறது. லீ என்ற அந்த நபர், 24 ஆண்டுகளுக்கு முன்பு மா என்ற தனது முன்னாள் க... மேலும் பார்க்க

ஒரு சேஃப்டி பின் விலை ரூ.69,000 - பிராடாவின் புதிய தயாரிப்பால் வெடித்த விவாதம்!

பிரபல ஃபேஷன் பிராண்டான பிராடா (Prada) சமீபத்தில் ஒரு சேஃப்டி பின்னை ஃபின்னை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விலை சுமார் ரூ.69,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை... மேலும் பார்க்க

ஆந்திரா: மாணவிகளை மசாஜ் செய்யச் சொன்ன பள்ளி ஆசிரியை; சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன?

ஆந்திராவில் ஆசிரியை ஒருவர் மாணவிகளைக் கொண்டு தனது கால்களை பிடித்துவிட செய்த சம்பவம் வைரலாகி இருக்கிறது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பந்தபல்லி என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசி... மேலும் பார்க்க