செய்திகள் :

திண்டுக்கல்: `லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு' -வத்தலக்குண்டு அருகே சோகம்

post image

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). இவருடைய மனைவி ஜோதி, மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன் மற்றும் ஹர்ஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டியில் மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தனர்.

ஒரே வண்டியில், 4 பேர் சென்றுகொண்டிருந்த நிலையில், வத்தலகுண்டு சாலை காந்திபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த செம்மண் லாரி, இவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனம்
விபத்துக்குள்ளான இரு சக்கர வாகனம்

இதில் காத்தவராயன் மற்றும் அவருடைய ஒன்பது வயது பேத்தி ஹர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய ஜோதி மற்றும் பேரன் ஹர்ஷன் ஆகியோரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனே வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜோதி பரிதாபகரமாக உயிரிழந்தார்.

சிறுவன் ஹர்ஷன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விருவீடு போலீசார் மூன்று பேர் உடலையும் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மெதினாவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் ... மேலும் பார்க்க

சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ரெட்டி உத்தரவு

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர... மேலும் பார்க்க

புனே: இரு லாரிகளிடையே சிக்கி தீப்பிடித்த கார் - 8 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்

புனே - பெங்களூரு இடையே பும்கர் என்ற இடத்தில் உள்ள மேம்பாலத்தில் டிரைலர் லாரி ஒன்று வாகனங்கள் மீது மோதிக்கொண்டது. இதனால் ஒன்றின் மீது ஒன்று மோதி 13 வாகனங்கள் இதில் சேதம் அடைந்தன. விபத்தில் சிக்கிய ஒரு ... மேலும் பார்க்க

குன்னூர்: திடீரென கலைந்த தேன்கூடு; அலறியடித்த பண்ணை பணியாளர்கள்!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் உள்ள வண்டிச்சோலை பகுதியில் வனத்துறையின் நாற்றாங்கால் செயல்பட்டு வருகிறது. பல்வேறு வகையான தாவர நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகம் செய்து வருகின்றனர். நாற்று உற்பத்தி... மேலும் பார்க்க

திண்டுக்கல்: மதுரை நான்கு வழிச் சாலையில் கவிழ்ந்த இராட்சத லாரி; போக்குவரத்து பாதிப்பு | Photo Album

இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்இராட்சச லாரி கவிழ்ந்ததில்... மேலும் பார்க்க