செய்திகள் :

`பள்ளி, கல்லூரி மாணவர்களே டார்கெட்' - ஊட்டியில் சிக்கிய ஒடிசா கஞ்சா வியாபாரி!

post image

மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தது வருகிறது. அதிலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு கூடலூர் வழியாக தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை பதுக்கி கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

குட்கா பறிமுதல்

ஊட்டி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஊட்டி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் இளைஞர் ஒருவர் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் முரணான தகவல்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கண்காணிக்கும் மேற்கொண்டதில் அவரிடம் மூன்று கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னணி குறித்து தெரிவித்த காவல்துறையினர், "ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முனா சாகு என்ற இளைஞன் வேலைக்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளான். கஞ்சா பழக்கம் உள்ள இவனிடம் பலரும் கஞ்சாவை வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அவ்வப்போது சொந்த ஊருக்குச்‌ செல்லும் இவன், கிலோ கணக்கில் கஞ்சாவை பார்சல் செய்து ரயிலில் கொண்டு வந்துள்ளான். அங்கிருந்து பேருந்துகள் மூலம் ஊட்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்திருக்கிறான்.

கஞ்சா

இவனிடம் தொடர்பில் இருந்த பலரும் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிவைத்து கஞ்சாவை விற்பனை செய்ததுடன் அவர்களையும் விற்பனையில் ஈடுபடுத்த முயற்சி செய்திருக்கிறான். கூட்டாளிகள் உட்பட மொத்த கும்பலையும் பிடிக்கும் முயற்சியில் தீவிர விசாரணை ரகசியமாக நடைபெற்று வருகிறது. கும்பலை கூண்டுடோடு பிடிக்கும் நோக்கில் முனா சாகுவின் புகைப்படங்களைக் கூட பகிராமல் வைத்திருக்கிறோம்" என்றனர்.

குஜராத்: கணவனைக் கொன்று கிட்சனில் புதைத்த மனைவி; அதன்மீது நின்று தினமும் சமைத்ததாக பகீர் வாக்குமூலம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகில் உள்ள சர்கேஜ் என்ற இடத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர் மொகமத் இஸ்ரேயல். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மொகமத் கொத்தனார் வேலை செய்து வந்தார். திடீரென கடந்த ஒரு வருடத்தி... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பெண்ணை தாக்கியதாக புகார்; ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா. கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் தெருவில் சென்று கொண்டிருந்த... மேலும் பார்க்க

தூத்துக்குடி: "வேலைக்கு அழைத்துச் செல்லாததால் கொன்றேன்" - பெயிண்டர் கொலை வழக்கில் பகீர் வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவர், அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், வீடுகளில் பெண்டிங் காண்ட்ராக்ட் எடுத்து செய்து வந்துள்ளார். இவர... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரை கிணற்றில் வீசி மறைத்ததாக இருவர் கைது - சாத்தூரில் துயரம்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி கெங்கையம்மன் கோயிலுக்கு திருமணத்திற்காக சிவலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனது உறவினர்களுடன் கடந்த 31 ஆம் தேதி இரவு சென்றுள்ளார்.இ... மேலும் பார்க்க

Sexual Abuse: `வழி நெடுக வலியின் சத்தமும்; அழுகுரலின் நடுக்கமும்' #Hersafety

கோவையில் தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முதுகலை முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியிரு... மேலும் பார்க்க

Dialysis செய்தவருக்கு HIV தொற்று ரத்தம்; உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவரின் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) இரண்டு சிறுநீரகங்களும் 2011 ஆம் ஆண்டு செயலிழந்துள்ளன. கணவரின் பராமரிப்பில் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ... மேலும் பார்க்க