செய்திகள் :

பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!

post image

2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (122 தொகுதிகள்) நவம்பர் 11-ஆம் தேதியில் நாளை நடைபெறவிருக்கிறது. NDA (பாஜக, JD(U), HAMS, LJP) மற்றும் மகாகத்பந்தன் (காங்கிரஸ், RJD, இடதுசாரி கட்சிகள் மற்றும் VIP) என இரு கூட்டணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ஹெலிகாப்டர்களில் பிரசாரம்
பீகார் தேர்தல் 2025

இதற்கிடையில் அரசியல் தலைவர்கள் இந்த பீகார் தேர்தல் பிரசாரத்திற்காக கடந்த தேர்தலைவிடவும் அதிகமான செலவுகளைச் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, இந்தத் தேர்தல் பிரசாரத்திற்காக அரசியல் கட்சிகள் அதிகமான ஹெலிகாப்டர் பயணங்களை மேற்கொண்டிருக்கின்றனர். 2020-ம் ஆண்டு நடந்த பீகார் தேர்தலோடு ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் 1.5 மடங்கு அதிகமான செலவுகள் செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு கூட்டணி கட்சிகளும் சேர்ந்து மொத்தம் 25 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தியுள்ளனர். தோராயமாக ஒரு ஹெலிகாப்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.3 லட்சம் - ரூ 4 லட்சம் வரை செலவாகிறதாம். இதில் 12 தனி விமானங்களும் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

NDA கூட்டணி ரூ.30 கோடி (1200 மணிநேரம்), மகாகத்பந்தன் கூட்டணி 10 கோடி (400 மணிநேரம்) என மொத்தம் ரூ 40 கோடி வரை ஹெலிகாப்டர் பயணங்களுக்காக மட்டும் செலவழித்திருக்கலாம் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

கடந்த பீகார் தேர்தலில் ரூ.26 கோடி செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆண்டு பாஜக - காங்கிரஸ் இடையேயான போட்டி தீவிரமடைதிருப்பதால் கோடிகளில் கொட்டி ஹெலிகாப்டரில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர்.

‘22% ஈரப்பதம்’ நெல் கொள்முதல் எனும் தேசிய நாடகம்... கைதட்டும் தி.மு.க; கும்மியடிக்கும் பா.ஜ.க!

அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு... உதைக்கு அஞ்சலாமா’ என்கிற பழமொழி போல்தான் இருக்கிறது, உழவர்களின் வாழ்க்கை. நாட்டுக்கே படியளக்கும் தங்களை, ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் ஆண்ட/ஆண... மேலும் பார்க்க

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க ... மேலும் பார்க்க

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க

"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக... மேலும் பார்க்க

ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ... மேலும் பார்க்க

விருதுநகர் நகராட்சிக் கூட்டம்: "பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை" - உறுப்பினர்கள் புகார்

விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது நடைபெற்ற விவாதம் வ... மேலும் பார்க்க