செய்திகள் :

பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!

post image

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவ ரூ.50 கோடி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இக்குற்றச்சாட்டை மறுத்து வந்ததனர்.

கோகாவாலா

இந்நிலையில் சிவசேனா எம்.எல்.ஏ மகேந்திர தல்வி கோடிக்கணக்கான பணத்தை கையாள்வது போன்ற ஒரு வீடியோவை உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மூத்த தலைவர் அம்பாதாஸ் தன்வே வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ வைரலானது. ஆனால் இது உத்தவ் தாக்கரே கட்சியின் அவதூறு செயல் என்று ஏக்நாத் ஷிண்டே கட்சியினர் தெரிவித்தனர்.

அம்பாதாஸ் தன்வேயிக்கு மிரட்டுவதுதான் தொழில் என்று தல்வி குறிப்பிட்டு இருந்தார். இந்த பிரச்னை சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. இந்த வீடியோ சர்ச்சை அடங்கும் முன்பு மற்றொரு சிவசேனா அமைச்சர் பரத் கோகாவாலாவும் அது போன்று பணத்துடன் இருக்கும் படத்தை உழவர் உழைப்பாளர் கட்சியை சேர்ந்த சித்ரலேகா என்பவர் வெளியிட்டு இருக்கிறார்.

ஆனால் அந்த படத்தை கோகாவாலா நிராகரித்துள்ளார். ஏற்கனவே மற்றொரு சிவசேனா அமைச்சர் சஞ்சய் ஷிர்சாத் பணத்துடன் இருக்கும் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்போது மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் பணத்துடன் இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த வீடியோக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தர்ம சங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.கவில் தங்களது கட்சிக்கு மாநகராட்சி தேர்தலில் கூடுதல் வார்டுகள் ஒதுக்கவேண்டும் என்று கூறி வரும் நிலையில் இந்த வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது.

`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு

மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?

கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை ப... மேலும் பார்க்க

"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக ச... மேலும் பார்க்க

ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார்.தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ப... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது ச... மேலும் பார்க்க

`பீகாரால் முடியாமல் போகலாம்; ஆனால் மேற்கு வங்க மக்களால் முடியும்’ - பாஜக-வை சாடிய மம்தா

இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு, மேற்கு வங்கம் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம... மேலும் பார்க்க