செய்திகள் :

மும்பை: வாட்ஸ்ஆப்பிற்கு வந்த இ-செல்லான்; திறந்து பார்த்த தொழிலதிபரிடம் ரூ.21 லட்சம் திருடிய மாணவர்

post image

இணையத்தளக் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதனைக் கட்டுப்படுத்த போலீஸார் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் குற்றங்கள் குறையவில்லை.

ஆன்லைன் பங்குச்சந்தை மோசடி, டிஜிட்டல் கைது, பணமோசடி என்று கூறி மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல வழிகளில் இந்த ஆன்லைன் குற்றங்கள் நடக்கின்றன. மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபருக்கு வாட்ஸ் ஆப் மூலம் டிராபிக் போலீஸாரின் இ-செல்லான் ஒன்று வந்தது. தொழிலதிபர் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க குஜராத்திற்குச் சென்று இருந்த நேரத்தில் இந்த மெசேஜ் வந்தது.

திருமண வேலையில் அவர் பிஸியாக இருந்தபோது இந்த மெசேஜ் வந்தது. இதனால் அவர் அந்த மெசேஜைப் பதிவிறக்கம் செய்தார். ஆனால் அந்த மெசேஜ் இணையதள மோசடி கும்பல் அனுப்பியது ஆகும். இது தொழிலதிபருக்குத் தெரியாது.

ஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஹர்திக் போர்டே
ஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஹர்திக் போர்டே

மெசேஜைத் திறந்த சிறிது நேரத்தில் தொழிலதிபரின் மொபைல் போனை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து, தொழிலதிபர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.33 லட்சம் மற்றும் 10.39 லட்சம் பணத்தை சைபர் கும்பல் அபகரித்துவிட்டது.

ஏதோ விபரீதம் நடந்து இருப்பதை உணர்ந்த தொழிலதிபர் உடனே மறுநாள் தனது வங்கிக்குச் சென்று இது குறித்து விசாரித்த போது இருவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.21 லட்சம் எடுக்கப்பட்டு இருந்தது. இது இணைய மோசடியாக இருக்கும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இது குறித்து மும்பை சைபர் பிரிவு போலீஸில் தொழிலதிபர் புகார் செய்தார். போலீஸார் விரைந்து விசாரித்தனர். இதில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஹர்திக் போர்டே என்பவர் வங்கிக் கணக்கிற்கு ரூ.8.5 லட்சம் சென்று இருந்தது தெரிய வந்தது.

உடனே அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த மோசடியில் பல அடுக்கு மோசடி கும்பலுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு கும்பல் திட்டமிட்டு பல அடுக்காகப் பிரிந்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை: நர்ஸ் குளிப்பதை வீடியோ எடுத்த ரூம்பாய்; லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்குச் சென்று விட்டு கடந்த 04.01.20... மேலும் பார்க்க

தென்காசி: குளியறையில் கொலைசெய்யப்பட்ட பெண்; சிக்கிய பால்காரர்... திருமணம் மீறிய உறவு காரணமா?

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி முருகசெல்வி. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது ம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து விவதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் ... மேலும் பார்க்க

`என் பையனை வளைச்சிப் போட்டுக்கிட்டா.!’ - மருமகளை தீர்த்துக் கட்டி புதைத்த கொடூர மாமியார்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் இருவரும் வளையாம்பட்டு கிராமத்த... மேலும் பார்க்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கோர்ட் கஸ்டடியிலிருந்த ஆதாரம் அழிப்பு; கேரள முன்னாள் அமைச்சருக்கு சிறை

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அக்கட்சியின் துணைத் தலைவராகவும் உள்ளார்.பினராயி விஜயன் கேரள மாநில ... மேலும் பார்க்க

வேலூர்: கல்லூரி மாணவனை அடித்துக் கொன்ற நண்பர்கள்; மஃப்ளர் மாட்டி பைக்கில் தூக்கிச் செல்லப்பட்ட சடலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகேயுள்ள பத்தியாவரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரின் மகன் டேனியல் வல்லரசு (19), வேலூர் ஊரீஸ் கல்லூரியில் பி.ஏ பாதுகாப்புத்துறைப் பாடப்பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார... மேலும் பார்க்க