செய்திகள் :

Apology Trend: 'மன்னிப்புக் கடிதம்தான் பாஸ் இப்போ டிரெண்ட்!' - எதனால் இதை நிறுவனங்கள் செய்கின்றன?

post image

சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டிரெண்ட் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அப்படி சமீபத்தில் ஹஸ்கி நாய் நடனமாடும் காணொளி பெரும் வைரலானது. நடிகர்கள் தொடங்கி பலரும் அந்த டிரெண்ட் நடனத்தை ரீகிரியேட் செய்திருந்தார்கள்.

தற்போது அந்த டிரெண்டைத் தொடர்ந்து பிராண்ட் நிறுவனங்கள் பலவும் மன்னிப்புக் கோரும் நகைச்சுவைக் கடிதத்தை வெளியிட்டு டிரெண்டை வைரலாக்கி வருகின்றன.

Skoda - Apology Statement
Skoda - Apology Statement

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல நிறுவனங்கள் தங்கள் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட் கொண்ட கடிதத்தில் இதனை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில்தான் இந்த மன்னிப்புக் கடிதம் டிரெண்ட் முதலில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் முதலில் ஸ்கோடா நிறுவனம் இந்த டிரெண்டைத் தொடங்கி வைத்தது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வாகன், ரிலையன்ஸ், பி.வி.ஆர், ஜீ எனப் பல நிறுவனங்களும் இந்த டிரெண்டில் இணைந்து மன்னிப்புக் கடிதங்களை வெளியிட்டிருக்கின்றன.

ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்ட கடிதத்தில், "ரிலையன்ஸ் டிஜிட்டலில் ஷாப்பிங் செய்த பிறகு வாடிக்கையாளர்கள் சில எதிர்பாராத பக்க விளைவுகளை எதிர்கொள்கின்றனர் என்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது.

Reliance - Apology Statement
Reliance - Apology Statement

வாடிக்கையாளர்கள் வேறு இடங்களில் விலைகளை இருமுறை சரிபார்த்து, எங்கள் ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட விலைகள் யாராலும் அடிக்க முடியாதவை என்பதை உணர்கின்றனர்" எனப் குறிப்பிட்டிருக்கிறது.

இதுபோல, பல நிறுவனங்களும் தங்களின் பிராண்டுகளை விளம்பரப்படுத்தும் வகையில் இப்படியான கடிதங்களைப் பதிவிட்டிருக்கின்றன.

GRT ஜுவல்லர்ஸ்: சங்கர நேத்ராலயா மற்றும் புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.50 லட்சம் உதவி

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ், உண்மையான வெற்றி என்பது வணிகத்தைத் தாண்டி மதிப்பை உருவாக்குவதில் இருக்கிறது என்று நம்புகிறது. இந்த நிறுவனம் பல தசாப்தங்களாக, மக்களின்... மேலும் பார்க்க

`மகளைப் பராமரிக்க ரூ.4 லட்சம் போதவில்லை' - ஹசின் ஜஹன் கோர்டில் மனு

கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கும், அவரின் மனைவி ஹசின் ஜஹன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீண்ட காலம் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, கொலைமிரட்டல் என ஷமி மீது ஜ... மேலும் பார்க்க

தெலங்கானா: "எறும்புகளோடு வாழ முடியாது" - எறும்புகள் மீதான பயத்தால் தற்கொலை செய்த பெண்

எறும்பைப் பார்த்தாலே சிலருக்குப் பயமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களை Myrmecophobia என்ற நோயால் பாதித்து இருப்பதாகக் கூறுவதுண்டு. தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் என்ற இடத்தில்... மேலும் பார்க்க

தங்கம் விலை உயர்வு: திருமணத்தில் தங்க நகைகள் அணிய பெண்களுக்குக் கட்டுப்பாடு; உத்தரகாண்டில் நூதனம்

தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதால் உத்தரகாண்டில் இரண்டு கிராம மக்கள் தங்க ஆபரணங்களை பெண்கள் பயன்படுத்துவதற்குப் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கின்றனர். இதே போன்று திருமணத்தில் மதுவு... மேலும் பார்க்க

ஆன்லைனில் கிரீம் வாங்கி பயன்படுத்திய பெண்; பாம்பு தோல் போல் மாறியதால் அதிர்ச்சி!

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் நகரைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது காலில் அரிப்புடன் கூடிய அலர்ஜி ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது உடல் முழுவதும் பரவத் தொடங... மேலும் பார்க்க

ரூ.40,000-க்கு ஏலம் போன ஒரு பப்பாளி பழம் - கர்நாடக கோயிலில் நடந்தது என்ன?

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் அமைந்துள்ள கனசகிரி மகாதேவா கோயிலில் நடந்த ஏலத்தில் ஒரு பப்பாளி பழம் ரூ.40,000-க்கு ஏலம் போயியுள்ளது. சதாசிவ்காட் பகுதியில் உள்ள கனசகிரி ... மேலும் பார்க்க