செய்திகள் :

BB Tamil 9: "ஒருதர மட்டும்னா 'Unfair Red Card’ங்கிற பேச்சு வரும்" - எவிக்‌ஷனில் நீண்ட விவாதம்?

post image

அடுத்த வாரத்துடன் நிறைவு பெறுகிறது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9.

வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, துஷார், பிரவீன், ஆதிரை உள்ளிட்ட இருபது பேருடன் நிகழ்ச்சி தொடங்கியது நினைவிருக்கலாம்.

இவர்களில் நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாமல் முதல் வாரத்திலேயே வெளியேறி விட்டார்.

பிரவீன் காந்தி, அப்சரா, திவாகர், துஷார், பிரவீன் உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்‌ஷன் மூலம் வெளியேறினர்.

கமருதீன்
கமருதீன்

முன்னதாக இந்தச் சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்ததால் டிவி முகங்களான அமித் பார்கவ், பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ் ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியில் நிகழ்ச்சிக்குள் சென்றனர்.

வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் சென்றவர்களிலும் பிரஜின், அமித் பார்கவ் இருவரும் வெளியில் வந்து விட்டனர்.

இந்நிலையில் இந்த வார எவிக்‌ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.

நேற்று நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சாண்ட்ராவை பார்வதியும் கமருதீனும் சேர்ந்து தள்ளி விட்டது பெரிய பிரச்னை ஆகி விட்டதால் இன்று இவர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்படலாமென்கிற எதிர்பார்ப்பு இருந்தது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அதேபோல ஷூட்டிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டது.

இருவருமே முதல் நாளில் இருந்து நிகழ்ச்சியில் தொடர்ந்து டாப் 5 பேரில் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தச் சம்பவத்தை வைத்து, அதுவும் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே இருக்கிற சூழலில் ரெட் கார்டு தருவதா என்கிற ஒரு விவாதம் சேனல் மட்டத்தில் நடந்ததாகச் சொல்கிறார்கள்.

அப்படி ஒருவேளை ரெட் கார்டு என்கிற முடிவுக்குப் போனால் கமருதீனை மட்டும் அனுப்பலாமென நினைத்தார்களாம்.

அவருக்குப் பலமுறை எச்சரிக்கை தரப்பட்டதைச் சுட்டிக்காட்டிய சிலர், எனவே அவரை மட்டும் அனுப்பி விடலாம். பார்வதிக்கு எச்சரிக்கை தந்து தொடர அனுமதிக்கலாம் என வாதிட்டிருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

ஆனால் விஜய் சேதுபதிதான், "நடந்த அந்தச் சம்பவத்தின்போது பார்வதி கமருதீனைத் தூண்டியது பளிச்செனத் தெரிவதால், அவரையும் அனுப்புவதே சரியானதாக இருக்கும். ஒருவரை மட்டும் அனுப்பினால், ’அன்ஃபேர் எவிக்‌ஷன்'னு சொல்றாங்களே, அந்த மாதிரி ’அன்ஃபேர் ரெட் கார்டு’ங்கிற பேச்சு கிளம்ப வழி வகுக்கும்" எனச் சொன்னதாகத் தெரிகிறது.

எனவே நீண்ட விவாதத்திற்குப் பிறகே டபுள் ரெட் கார்டு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம்..

BB Tamil 9: `சில போட்டியாளர்கள் ரொம்பவே ஓவரா பண்றாங்க!' - ரெட் கார்டு விவகாரம் குறித்து கூல் சுரேஷ்

நிறைவுப் பகுதியை நெருங்கி விட்டது பிக்பாஸ் சீசன் 9.திவாகர், பிரவீன் காந்தி, வி.ஜே பார்வதி, கமருதீன் உள்ளிட்ட இருபது போட்டியாளர்களுடன் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய நிகழ்ச்சியில் பிறகு அமித் பார்கவ... மேலும் பார்க்க

BB Tamil 9: "ஃபிராட்; விமர்சனத்தை ஏத்துக்க முடியாத ஒரு நபர்.!" - விக்ரமைச் சாடிய வியானா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய... மேலும் பார்க்க

BB Tamil 9: ரெட் கார்டு மூலம் வெளியேறுபவருக்கு சம்பளம் இல்லையா? அக்ரிமென்ட் சொல்வது இதுதான்!

எதிர்பாராததை எதிர்பாருங்கள்கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ஒரு பிக்பாஸ் சீசனில் இந்த வாசகம் ரொம்பவே பிரலமானது.இப்போது உண்மையிலேயே எதிர்பாராததுதான் நடந்திருக்கிறது.சுமார் 90 நாட்கள் வரை அந்த வீட்டுக்குள் கன... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 91: பாரு இல்லாத ஷோ; விக்ரம் சறுக்கிய அந்த இடம்! - 91வது நாளில் நடந்தது என்ன?

ஓரளவிற்கு நன்றாக ஆடிக் கொண்டிருந்த சுபிக்ஷா வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால் சான்ட்ரா இன்னமும் உள்ளே இருக்கிறார்.எவிக்ஷன் பின்னணியில் உள்ள மர்மமும் அநீதியும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.BB TAMIL 9 DA... மேலும் பார்க்க

BB Tamil 9: 'My Game Is Done' - வியானாவின் பேச்சால் உடைந்து அழும் விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய... மேலும் பார்க்க

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் வியானா; பணத்தை சேர்க்கும் போட்டியாளர்கள்! - இது பணப்பெட்டி டாஸ்க் 2.O

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 91 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வராம் 9 பேர் பிக் பாஸ் வீட்டில் இருந்த நிலையில் தற்போது 6 பேர் தான் இருக்கின்றனர்.கம்ருதீன், பார்வதி இருவரும் ரெட் கார்ட் வாங்கி வெளியேறிய... மேலும் பார்க்க