செய்திகள் :

Coffee bean: காபி கொட்டைகளை தின்று அழிக்கும் துளைப்பான் வண்டுகள்; 1990-க்கு பிறகு மீண்டும் பாதிப்பு

post image

நீலகிரி மாவட்டத்தில் 7,348 ஹெக்டேர் பரப்பளவில் காபி பயிரிடப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த சில பழங்குடிகள் முதல் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்கள் வரை, நீலகிரியில் விளைவிக்கும் காஃபி கொட்டைகளை நாட்டின் பல பகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

வண்டுகளால் பாதிக்கப்பட்ட காபி பழங்கள்
வண்டுகளால் பாதிக்கப்பட்ட காபி பழங்கள்

இந்த நிலையில், 1990-ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கூடலூரில் கண்டறியப்பட்ட காபி கொட்டை துளைப்பான் வண்டுகள் தற்போது மீண்டும் தலைதூக்கி வருகின்றன.

அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் காபி கொட்டைகளை தாக்கி சேதம் விளைவிக்கும் இந்த பூச்சிகளால் விவசாயிகள் கலக்கமடைந்து வருகின்றனர்.

வண்டு பரவலை உடனடியாக கட்டுப்படுத்தும் முயற்சியில் தோட்டக்கலை ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

காபி கொட்டை துளைப்பான் வண்டுகளை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து தெரிவித்த நீலகிரி மாவட்ட தோட்டக்கலை ஆய்வாளர்கள்,

“காபி பயிர்களுக்கு மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தும் காபி கொட்டை துளைப்பான் பூச்சிகளை 1990-ஆம் ஆண்டு முதன்முதலில் கூடலூரில் கண்டறியப்பட்டது.

கட்டுப்படுத்தப்பட்ட துளைப்பான் பூச்சிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு கூடலூர் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் தற்போது பரவியுள்ளது.

வண்டுகளால் பாதிக்கப்பட்ட காபி பழங்கள்
வண்டுகளால் பாதிக்கப்பட்ட காபி பழங்கள்

மிகச் சிறிய வண்டான இது காபி பழத்தினுள் நுழைந்து கொட்டைகளை சேதப்படுத்தி, அதனுள்ளேயே முட்டைகளையும் இடுகின்றது. அதிலிருந்து வெளிவரும் பூச்சிகள் காபி கொட்டைகளை தின்று விளைச்சலில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

பூச்சி தாக்குதலுக்கு உள்ளான காபி கொட்டைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லக் கூடாது. பழம் சேகரிக்க பயன்படுத்தப்படும் பைகளை நன்றாக புகையூட்ட வேண்டும்.

பாதிக்கப்பட்ட கொட்டைகளை கொதிக்கும் நீரில் 2-3 நிமிடங்கள் நனைப்பது வண்டுக்களின் அனைத்து நிலைகளையும் கொல்லும்.

காபி கொட்டை துளைப்பான் வண்டுகள் | Rep image AI
காபி கொட்டை துளைப்பான் வண்டுகள் | Rep image AI

காபி கொட்டைகளை உலர்த்தி சேமிக்கும் போது அதன் ஈரப்பத அளவு குறைவதால் வண்டுகளின் இனப்பெருக்கத்தை தடுக்க முடியும். மேலும், அடுக்கு புனல் பொறி மற்றும் பதுங்குக் குழி பொறி போன்ற பொறிகளை அமைப்பதன் மூலம் வண்டுகளைக் கவர்ந்து அழிக்கலாம்.

பிவேரியா பாசியானா என்ற பூஞ்சாண உயிர்கொல்லியை தெளிப்பதும், இயற்கை எதிரிகளான செபலோனோமியா ஸ்டீபன்டாரிக்ஸ் மற்றும் பிமாஸ்டிகஸ் போன்ற ஒட்டுண்ணிகளை காபி தோட்டங்களில் விடுவதன் மூலமும் இந்த வண்டு பரவலை குறைக்க முடியும்” என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

டிட்வா புயல்: தொடர் மழையால் வெள்ளக்காடான டெல்டா வயல்கள்; 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர் மூழ்கிய வேதனை

டெல்டா மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் டிட்வா புயல் காரணமாக நேற்று பகல் முழுவதும் தொடர் மழை பெய்தது. இரவுக்குப் பிறகு சற்று லேசாகப் பெய்த மழை பரவலாக இருந்தது. நாகப்பட்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: முருங்கைக்காய் கிலோ ரூ.320, கத்தரிக்காய் ரூ.120 - விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 எக்கர் பரப்பளவில் யாழ்ப்பாணம்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மழை வெள்ளத்தில் மூழ்கிய 50,000 வாழைகள்; படகில் மீட்டு விற்பனைக்கு அனுப்பிய விவசாயிகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில... மேலும் பார்க்க

சங்கரன்கோவில்: மல்லிகைப்பூ கிலோ ரூ.7,500-க்கு விற்பனை; வரத்து குறைவால் விலை கடும் உயர்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, முல்லைப்பூ, கனகாம்பரம், மரிக்கொழுந்து போன்ற மலர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: உதவாத `உலர்களங்கள்' - விலை போகாத பயிர்கள்... குமுறும் விவசாயிகள்!

உலர்களம்உலர்களம் என்பது ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் தங்களின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காக இருக்கிறது.ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் உலர்களத்தின் பரவ... மேலும் பார்க்க

``நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம்'' - குறைதீர் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த விவசாயிகள்

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றபோது, விவசாயிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெற்கதிர்கள்மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆ... மேலும் பார்க்க