செய்திகள் :

Delhi: ``செங்கோட்டையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதலே'' - உறுதி செய்த NIA

post image

தேசிய புலனாய்வு முகமை (NIA) டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு, மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களைப் (IED) பயன்படுத்தி உமர் உல் நபி என்பவரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதல்தான் என்பதை உறுதி செய்துள்ளது.

அதிகாரிகள் கைது செய்த நபியின் நெருங்கிய கூட்டாளியின் மூலமாக இதனை உறுதி செய்துள்ளனர்.

Delhi Blast
Delhi Blast

NIA அதிகாரிகள் ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில், பாம்போர் ஒன்றியத்தில் உள்ள சம்பூரா கிராமத்தைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி என்ற நபரை கைது செய்தனர். இவர் நவம்பர் 10 அன்று 13 பேர் கொல்லப்பட்டு 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தாக்குதலை நடத்த நபியுடன் இணைந்து சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இவர் பெயரிலேயே வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புல்வாமாவைச் சேர்ந்த உமர் உன் நபு ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இவருக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் NIA பறிமுதல் செய்து சோதனை நடத்தி வருகிறது.

இந்த வெடிப்புடன் தொடர்புடைய விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேரை NIA ஞாயிறு அன்று (நவ. 16) விடுதலை செய்துள்ளனர். இவர்களை முக்கிய குற்றவாளியான நபியுடன் தொடர்புபடுத்தும் ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டதாக விளக்கமளித்தது.

விடுவிக்கப்பட்ட டாக்டர் ரெஹான், டாக்டர் முகமது, டாக்டர் முஸ்தகீம் மற்றும் உர வியாபாரி தினேஷ் சிங்லா ஆகியோர் நூஹ் பகுதியில் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவர்கள் முன்பு நபியுடன் தொடர்பில் இருந்துள்ளனர். மேலும் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அல் ஃபலா பல்கலைக்கழகத்துடனும் தொடர்பில் இருந்துள்ளனர். வெடி மருந்துக்கான ரசாயனங்கள் உர வியாபாரியிடம் இருந்து வாங்கப்பட்டதா என்ற ரீதியிலும் NIA விசாரணை நடத்தியது.

இந்த வழக்குக்காக NIA, வெடிப்பில் காயமடைந்தவர்கள் உட்பட 73 சாட்சிகளை விசாரித்துள்ளது. இதில் டெல்லி காவல்துறை, ஜம்மு & காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல்துறை, உத்தரபிரதேச காவல்துறை மற்றும் பிற நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்த வெடிப்பின் பின்னால் இருக்கும் அத்தனை பேரையும் கைது செய்யவும், பெரிய சதியை வெளிக்கொண்டு வரவும் பல மாநிலங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேசியதாஸ்சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர... மேலும் பார்க்க

கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.அதன்படி, அடுத்த ஆண... மேலும் பார்க்க

தேமுதிக: ``28 லட்சம் மக்கள் கலந்துகொண்ட மாநாடு அசம்பாவிதம் நடந்ததா?'' -தேனியில் பிரேமலதா விஜயகாந்த்

தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'உள்ளம் தேடி! இல்லம் நாடி!' என்ற பெயரில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது வான வேடிக்கைகளுடன் மேளம் முழங்க தேவராட்டத்துடன் பிரேமலதா ... மேலும் பார்க்க

மதிமுக: ``விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது; அவர் வெற்றிப் பெற வேண்டுமெனில்'' -துரை வைகோ பேச்சு

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரைவைகோ அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்... மேலும் பார்க்க

``விஜய் முதல்வராக வருவதை தடுக்க SIR-ல் திமுக முறைகேடு செய்கிறது'' - தவெக நிர்மல்குமார் குற்றச்சாட்டு

எஸ்.ஐ.ஆருக்கு எதிராக மதுரையில் தமிழக வெற்றிக்கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்க வந்த மாநில இணை பொதுச்செயலாளர் சி.டி நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "தீவிர வாக்காளர் திருத்தத்தை எ... மேலும் பார்க்க