செய்திகள் :

US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!

post image

அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். என்று வெளிநாட்டினர் மீதும், வெளிநாட்டு மாணவர்கள் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ட்ரம்ப் அரசு.

இதற்காக, விசா, கல்வி விசா, H-1B விசா என விசாக்களுக்கு தொடர்ந்து கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது அமெரிக்க அரசு. இதனால், அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினர் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுவரை பேசி வந்ததற்கு முற்றிலும் மாறாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அமெரிக்கா - வெளிநாட்டு மாணவர்கள்
அமெரிக்கா - வெளிநாட்டு மாணவர்கள்

வெளிநாட்டு மாணவர்கள்

வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் படிப்பது தொடர்பாக, "வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவிற்கு டிரில்லியன் டாலர் கணக்கில் வருமானத்தைக் கொண்டு வருகின்றனர். இது அமெரிக்க மாணவர்கள் மூலம் வரும் வருமானத்தை விட, இரண்டு மடங்கு அதிகமாகும்.

இதனால், அவர்கள் எனக்கு வேண்டும் என்பதில்லை. நான் அவர்களை வணிக ரீதியாக பார்க்கிறேன்.

இந்த மாணவர்களை பாதியாக குறைத்து நம்முடைய பல்கலைக்கழகம் மற்றும் காலேஜ் சிஸ்டத்தையும், அவர்கள் வருமானத்தையும் பாதிக்க நான் விரும்பவில்லை. எனக்கு அது நடக்க வேண்டாம்" என்று ட்ரம்ப் பேசியுள்ளார்.

ஹெச்-1பி விசா

அடுத்ததாக ஹெச்-1பி விசா குறித்து, "அமெரிக்கர்களிடம் சில திறமைகள் இல்லைதான். உற்பத்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில், அமெரிக்கர்களுக்கு, அதிக அனுபவம் இல்லை. அதனால், அவர்களை பயிற்சி இல்லாமல் இந்தத் துறைகளில், ஈடுபடுத்த முடியாது.

H1B விசா
H1B விசா

அதனால், அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து திறமையானவர்களை இங்கே அழைத்து வர வேண்டும்" என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

முன்பு ட்ரம்ப் பேசியதற்கும், இப்போது பேசுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ட்ரம்பின் இந்த மாற்றம் எவ்வளவு நாள் வரை செல்லுமோ, இவர் இந்தக் கருத்தில் இருந்து எப்போது அந்தர்பல்டி அடிப்பாரோ, அத்தனையையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மோதிக்கொள்ளும் பெருசுகள்; நொந்துகொள்ளும் காவி இளசுகள் டு வசூலுக்குத் தயாராகும் எம்.பி! | கழுகார்

கொதிக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்!“அவர்கள்மீது அப்படியென்ன பாசமோ?”மதுரையில், இலைக் கட்சியின் பூத் கமிட்டிப் பயிற்சி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இலைக் கட்சியின் ‘சூரிய’ மாஜி, “நமது தல... மேலும் பார்க்க

Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த சம்பவத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கடந்துவிட்டன. இதில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர்.தற்போது கூட்ட நெரிசல் மிக்க சாலையில் வெள்ளை நிற ஐ20 கா... மேலும் பார்க்க

SIR FAQ #5: பென்சிலில் Enumeration Form எழுத வேண்டுமா? | Decode | Vikatan

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் நடைபெறும் SIR குறித்து மக்களுக்கு அடிக்கடி வரும் முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் தரப்படுகின்றன.வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வெளிநாட்டில் உள்ளவர்... மேலும் பார்க்க

9% அதிகரித்த வாக்குப்பதிவு; `பீகார் தேர்தல் பேட்டர்ன்’ மீண்டும் பலிக்குமா? வரலாறு சொல்வது என்ன?

பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு பின்னான கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 150 - 170... மேலும் பார்க்க

``பெண்கள் தைரியமாக புகாரளிப்பதால் பாலியல் வழக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது'' - அமைச்சர் கீதாஜீவன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சமூ... மேலும் பார்க்க

``கொடூரமான தீவிரவாத செயல்'' - டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு

கடந்த 10-ம் தேதி, மாலை 6.52 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே 'ஹுண்டாய் ஐ20' கார் வெடித்து சிதறியது. செங்கோட்டை அருகேயே நடந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது. சிசி... மேலும் பார்க்க