4 வயதுக் குட்டிப் பையன் விஜய்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த அதிசய சந்திப்ப...
"என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்" - கார் ரேஸ் குறித்து அஜித்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.
அந்தவகையில் பிரான்ஸில் நடந்த கார் பந்தயத்தில் பங்கேற்றிருந்தார். நேற்று நடந்த கார் பந்தயத்தில் 5 வது இடத்தை அஜித்குமாரின் அணி பிடித்திருந்தது.
இந்நிலையில் பந்தயத்திற்குப் பிறகு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி கொடுத்த அஜித்குமார், " நான் தொடர்ந்து கார் பந்தயங்களில் பங்கேற்பேன். என்னால் எவ்வளவு காலம் முடியுமோ, அவ்வளவு காலம் இதில் நிலைத்திருப்பேன்.

ஒவ்வொரு ஆண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க வேண்டும் என்பதே என் விருப்பம். கார் பந்தயத்தில் எனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக, கடந்த 3 ஆண்டுகளாக நான் துபாயில் வசித்து வருகிறேன்.
ஆனால் என் குடும்பத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். பந்தயங்களில் நான் தொடர்ந்து பங்கேற்க வேண்டிய பொறுப்புகள் இருப்பதால், தற்போது பந்தயப் பயிற்சிகளுக்காக அதிக நேரத்தைச் செலவழித்து வருகிறேன்.
நாங்கள் இப்போது எங்களுடைய 2027-ஆம் ஆண்டிற்கான பந்தயத் திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.




















