செய்திகள் :

காரைக்குடி: ``ரீல்ஸ் முக்கால்வாசி பொய்தான், கல்விதான் ரியல்'' - பள்ளி விழாவில் உதயநிதி அறிவுரை

post image

சிவகங்கை மாவட்டத்திற்கு இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடி அழகப்பா மாதிரி பள்ளி வளாகத்தில் நடந்த மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல், சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குதல், குழந்தைகள் தினம் ஆகிய முப்பெரும் விழாவில் கலந்துகொண்டார்.

பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின்
பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின்

அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஷ், மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழாவில் கலந்து கொண்டு பேசும்போது, "சிவகங்கை மாவட்டத்தில் 12,500 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும் 5.35 லட்சம் சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.

அமைச்சர் அன்பில் மகேஷ் பேசும்போது, 'சைக்கிள்கள் வழங்குவது பிற்பட்டோர் நலத்துறை, வாங்குவது பள்ளி கல்வித்துறை' என்று தெரிவித்தார். அதில் சிறு திருத்தம், கொடுப்பது முதல்வர் ஸ்டாலின், வாங்குவது பள்ளி மாணவர்கள். இதில், மாணவர்கள் விட 57,000 மாணவிகள் கூடுதலாக சைக்கிள்கள் பெறுகின்றனர். இதற்கு அதிக மாணவிகள் பள்ளியில் சேர்ந்து படிப்பதுதான் காரணம். இதுதான் திராவிட மாடல் அரசுக்கு கிடைத்த வெற்றி.

பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின்
பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின்

அக்காலக்கட்டத்தில் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். படிக்க உரிமை கிடையாது. அனைத்துப் பெண்களையும் படிக்க வைத்தது திராவிட இயக்கம். நூறு ஆண்டு போராட்டம், தியாகத்துக்கு பிறகுதான் இந்த நிலையை அடைந்தோம். ஒரு குடும்பத்தின் ஏழ்மை நிலையை போக்கக்கூடியது கல்வி. பொருள், பணத்தை மட்டும் கொடுப்பது அல்ல கல்வி, அதோடு நம்பிக்கையையும், ஆற்றலையும் தருகிறது.

அதனால்தான் இந்தியாவிலேயே அதிக திட்டங்களை கல்வித்துறையில் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மாணவர்கள் சிந்தனை ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். பெரியவர்களை விட அதிகம் சிந்திக்கக்கூடியவர்கள் குழந்தைகள்தான். சொல்லப்போனால், பெற்றோருக்கே குழந்தைகள்தான் ஆசிரியர்கள்.

பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தொடர்ந்து பகுத்தறிவை வலியுறுத்தினர். பகுத்தறிவு என்றால் ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால்தான் தெளிவான பதில் கிடைக்கும். அதனால்தான் இந்தியாவிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. உலக நாடுகளோடு போட்டியிடக் கூடிய அளவுக்கு தமிழகத்தை உயர்த்த வேண்டும்.

காரைக்குடி பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின்
காரைக்குடி பள்ளி விழாவில் உதயநிதி ஸ்டாலின்

அதற்கு மாணவர்கள் விடா முயற்சியுடன் படிக்க வேண்டும். சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பள்ளிகளில் 22 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் 8 லட்சம் கல்லூரி மாணவர்கள் மாதம் ரூ 1000 பெறுகின்றனர். விரைவில் கல்லூரிகளில் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தில் யுபிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றில் ரீல்ஸ் பார்க்கிறோம். ரீல்ஸ் வாழ்க்கை கிடையாது, அதில் வருவது எல்லாம் முக்கால்வாசி பொய்தான். ரியலாக கல்விதான் கை கொடுக்கும். கல்வியோடு சேர்ந்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

கல்வியில் முன்னேறினால் குடும்ப பொருளாதாரம் முன்னேறும். அது மூலம் தமிழகமும் முன்னேறும். ஆசிரியர்கள் உடற்கல்வி பாடவேளையை கடன் வாங்கி மற்ற பாடங்களை நடத்த வேண்டாம். முடிந்தால் மற்ற பாடவேளைகளையும் உடற்கல்விக்கு கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு படிப்பு எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு உடல் ஆரோக்கியம் முக்கியம்" இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பேச்சு போட்டியில் பரிசு பெற வந்த எட்டாம் வகுப்பு மாணவியை துணை முதல்வர் முன் மீண்டும் பேசச் சொன்னபோது, "மாணவர்களின் பெற்றோர்கள் மதுவிற்கு அடிமையாகி மதுபானக் கடைகளில் குடியிருக்கிறார்கள், இவர்களால் எப்படி தங்களது குழந்தைகளை நல்ல கல்வியாளர்களாக வளர்க்க முடியும்?" என்ற ரீதியில் பேசியது அங்கிருந்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சங்கடப்படுத்தினாலும் துணை முதல்வர் மாணவியை பாராட்டி நூல் பரிசளித்தார். இந்தச் சம்பவம் விழாவில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

TVK: ``காவல்துறையால் தடுத்து நிறுத்தப்படும் தவெக தொண்டர்கள்?'' - குற்றஞ்சாட்டும் மா.செக்கள்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தவெக சார்பில் சிவானந்தம் சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு செல்ல தவெக தொண்டர்களை அனுமதிக்க மறுப்பதாக குற்றஞ்சா... மேலும் பார்க்க

புதுச்சேரிக்கு ஆரஞ்ச் அலர்ட்: `மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்' - ஆட்சியர் எச்சரிக்கை

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், புதுச்சேரிக்கு இன்று `ஆரஞ்ச் அலர்ட்’ விடப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக புதுச்சேரி அரசின் பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான கு... மேலும் பார்க்க

``பீகார் தேர்தல்; பாஜக-தேர்தல் ஆணையம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?'' - திருமாவளவன் விமர்சனம்

"பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில் நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது." என்று பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து குற்றம்சா... மேலும் பார்க்க

``நாட்டுக்கும், ஊருக்கும் காங்கிரஸ் ஆகாது- ராஜேந்திர பாலாஜி

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகர , ஒன்றிய, பேரூர் கழகங்களில் உள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், விருத... மேலும் பார்க்க

குடும்பத்தையும், அரசியலையும் துறக்கிறேன்: லாலு பிரசாத்திற்கு சிறுநீரகம் தானம் செய்த மகள் அறிவிப்பு

நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இத்தோல்வி முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. கூட்டணியை இறுதி செய்வதில... மேலும் பார்க்க

பர்கூர் கிளை நூலகம்: ``ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வீணாகும் நிலை'' - வாசகர்கள் வேதனை

“அறிவுதான் அழியாத செல்வம்" என்பார்கள். அந்த அறிவைப் புகட்டும் கோயில்கள்தான் நூலகங்கள். ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் செயல்படும் கிளை நூலகத்தின் இன்றைய நிலைய... மேலும் பார்க்க