செய்திகள் :

திண்டுக்கல்: ``கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறத்துக்கு மாறிய நீர்'' - தவிக்கும் மக்கள்; காரணம் என்ன?

post image

திண்டுக்கல், சீலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட எஸ். பெருமாள்கோவில்பட்டி மற்றும் ஏ. ஓடைப்பட்டியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இங்கு உள்ள செல்லமந்தாடி பெரியகுளம் தண்ணீர் தான் இந்த இரண்டு ஊர் மக்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் நகர் பகுதியான என்.ஜி. ஓ காலனி மற்றும் நந்தவனப்பட்டி அருகே உள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பச்சை நிறத்தில் வாய்க்கால் மூலம் பெரியகுளத்தில் உள்ள தண்ணீரில் கலந்து வருகிறது.

இதனால் பெரியகுளத்தின் நீரும் பச்சை நிறத்திற்கு மாறியது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்ததோடு இந்த நீரையே குடிப்பதற்காக அச்சமாக உள்ளது என்றனர். இது குறித்து ஊர் மக்கள் கூறுகையில், “ இப்பகுதி மக்கள் அனைவரும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் பஞ்சாயத்து கிணறு அந்த பெரியகுளத்தின் அருகில் இருப்பதனால் அந்த கிணற்று நீரும் பச்சை நிறத்தில் மாறி மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

கிணற்று நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கிறது

மேலும் ஆழ்துளை கிணற்று நீரும் பச்சை நிறமாக மாறி கலங்கலாக வருவதால், இதை குடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், இருமல் மற்றும் தோல் சம்பந்தமான பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. இந்த நீரினை கொண்டு விவசாயம் கூட செய்ய முடியவில்லை.

ஒரு காலத்தில் கால்நடைகளை ஓட்டி சென்று குளிப்பாட்டி விளையாடிய பெரிய குளம் தண்ணீர் தற்போது கால்களை கூட வைக்க முடியாத அளவிற்கு கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசிகிறது.

தொழிற்சாலை கழிவுநீர் கலக்கும் காட்சி

கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை” என்று கவலையோடு கூறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டபோது, “புகார் குறித்து விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

முல்லை பெரியாறில் வெள்ளப்பெருக்கு: உப்பார்பட்டி தடுப்பணை உடைப்பு; தவிக்கும் தேனி விவசாயிகள்

தேனி வீரபாண்டி அருகே முல்லை பெரியாற்றின் குறுக்கே கட்டபட்டுள்ளது உப்பார்பட்டி தடுப்பணை. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த கனமழையால் முல்லை பெரியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் உப... மேலும் பார்க்க

சேலத்தில் கனமழை எதிரொலி; ஏற்காடு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு என்ன?

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் கொட்டிய 17 செமீ மழை; சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வங்க கடல் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு ம... மேலும் பார்க்க