``IIT மெட்ராஸ் பறை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' - விருதுநகரில் பறை இச...
மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த தந்தை - ராமநாதபுரத்தில் சோகம்!
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்ள மோட்டார் மின் சுவிட்சினை பழுது பார்த்துள்ளார். அப்போது களஞ்சியத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனைக் கண்ட வீட்டில் இருந்தவர்கள் களஞ்சியத்தை மீட்டு மண்டபத்தில் உள்ள ஆரம்ப்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு களஞ்சியத்தைப் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மகன் உயிரிழந்த துக்கத்தினை தாங்க முடியாத களஞ்சியத்தின் தந்தை சேகர், மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனிமையில் இருந்த சேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


தகவல் அறிந்த மண்டபம் போலீஸார், உயிரிழந்த மகன், தந்தை உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன் உயிரிழந்த துக்கத்தினை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மண்டபம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோக சம்பவம் குறித்து மண்டபம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



















