செய்திகள் :

மேற்கு வங்கம்: பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 பேர் பலி; திறந்திருந்த லெவல் கிராஸிங்தான் காரணமா?

post image

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று பள்ளி வேன் மீது மோதியதில், இரண்டு மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இதில் 5 மாணவர்களும் காயமடைந்தனர்.

முர்ஷிதாபாத்தின் பெர்ஹம்பூர் பகுதியில், கர்ணசுபர்ணா ரயில் நிலையம் அருகில் உள்ள ரயில்வே கிராஸிங்கில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து நடந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் ரயில்வே கிராசிங் திறந்திருந்தது. இதையடுத்து பள்ளி வேன் ஒன்று அதைக் கடந்து செல்ல முயன்றது. அந்நேரம் ​​அவ்வழியே வந்த நிம்திதா-கட்வா பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதிக்கொண்டது.

போலீஸாரும், ரயில்வே அதிகாரிகளும் விரைந்து செயல்பட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இதில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்து
விபத்து

விபத்துக்குள்ளான வேன் ரயில் தண்டவாளத்தில் உருக்குலைந்த நிலையில் கிடந்த காட்சி வைரலாகி இரூக்கிறது. விபத்தில் காயமடைந்த மாணவர்கள் முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு ரயில் கடந்து செல்லும் வரை மூடப்பட்டிருந்த ரயில்வே கேட், அது சென்ற பிறகு திறக்கப்பட்டதாகவும், ஆனால் அடுத்த தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வந்துகொண்டிருந்தபோதும் கேட் மீண்டும் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து குறித்து முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. விபத்தைத் தொடர்ந்து, கிழக்கு ரயில்வேயின் ஹவுரா பிரிவில் உள்ள அசிம்கஞ்ச்-கட்வா வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”அழுகை சத்தம் இப்போதும் மறையவில்லை” - நினைவு தினத்தில் கலங்கிய பெற்றோர்

கும்பகோணம் ஶ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் பள்ளியில் படித்த 94 குழந்தைகள் தீக்கு இரையாகினர். பல குழந்தைகள் கடும் தீகாயங்களுடன் மீட்கப்பட... மேலும் பார்க்க

மதுரை: ஆம்னி பேருந்தும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐந்து பேர் பலியான சோகம்

சென்னையில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து திடீரென தனது கட்டுப்பாட்டு இழந்து நடுவில் உள்ள தடுப்பில் மோதி எதிர்திசையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பே... மேலும் பார்க்க

பேங்காக் பாரில் பயங்கர தீவிபத்து: 27 பேர் உடல் கருகி பலி; 60 பேர் காயம்; எப்படி நடந்தது?

தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் சத்துசக் மாவட்டத்தில் அமைந்துள்ளது Rong Beer Na Lat Phrao என்ற பிரபல உணவகம் மற்றும் பொழுதுபோக்கு விடுதி. நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வார இறுதி நாளைக் கொண்டாட... மேலும் பார்க்க

வியட்நாமில் பயங்கரம்: சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் பரிதாப மரணம்!

வியட்நாமின் புகழ்பெற்ற புக்குவக் (Phu Quoc) தீவு அருகே சுற்றுலாப் பயணிகள் சென்ற விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள... மேலும் பார்க்க

திருப்பூர்: நேருக்கு நேர் மோதிக்கொண்ட டேங்கர் லாரி - கார்; 2 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

சேலம் மாவட்டம், சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமா. இவரின் கணவர் முகிலன், தந்தை ஈஸ்வரன், தாய் திருமகள், பாட்டி சிவகாமி மற்றும் இவர்களின் குழந்தைகள் ஸ்ரீநித்து, கனிஷ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், ப... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்

மகாராஷ்டிரா முழுக்க தற்போது பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் ஒடிந்து விழுந்து வருகிறது. மின்வயர்களும் அறுந்து விழுந்து வருகிறது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள காம்க... மேலும் பார்க்க