செய்திகள் :

Dileep: நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல்; ஏ1 முதல் ஏ6 வரைதான் குற்றவாளிகள்; திலீப் விடுவிப்பு

post image

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். காரில் வைத்தே பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன் அதை வீடியோவாக பதிவுசெய்து, வீடியோவை பரப்பவும் செய்தனர்.

8வது குற்றவாளி

நாட்டையே உலுக்கிய இந்த பாலியல் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நடிகையின் கார் டிரைவராக இருந்த பல்சர் சுனி என்ற சுனில் குமார் முதலில் கைது செய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் நடிகர் திலீபுக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. மொத்தம் 10 பேர் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அதில் முதலில் பல்சர் சுனியும், 8-வது இடத்தில் நடிகர் திலீப் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கின் ஆரம்பகட்டத்தில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் இரண்டரை மாதங்கள் சிறையில் இருந்த திலீப் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் பிரின்ஸிபல் செசன்ஸ் கோர்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுப் பாலியல் வன்கொடுமை
கூட்டுப் பாலியல் வன்கொடுமை

வழக்கின் பின்னணி

நடிகையை அவமானப்படுத்தும் விதமாக பாலியல் தொல்லை அளித்து வீடியோ எடுக்கும் நோக்கில் இந்த பாலியல் குற்றம் நடந்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. துபாயில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் திலீப், நடிகை காவியாவுடன் மிகவும் நெருங்கி பழகியுள்ளார். அதுபற்றி திலீபின் முதல் மனைவி மஞ்சுவாரியரிடம் பிரபல நடிகை கூறியிருக்கிறர். இதையடுத்து மஞ்சுவாரியாருக்கும் திலீபிற்கும் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு விவகாரத்தானது.

இதையடுத்து நடிகர் திலீப், நடிகை காவியா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். நடிகை மஞ்சு வாரியரிடம் நட்பாக இருந்த பிரபல நடிகை மீது ஏற்பட்ட கோபத்தில் அவரை பழிவாங்கவே பல்சர் சுனி மூலம் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றியதாக போலீஸ் விசாரணையில் கூறப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை நடவடிக்கைகள் 2018-ம் ஆண்டு தொடங்கின. 261 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 1700 ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கில் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்ற பல்சர் சுனிக்கு நடிகர் திலீப் ஒன்றரை கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது.

நடிகர் திலீப்

சுமார் எட்டரை ஆண்டுகளுக்குப்பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு இன்று கூறப்பட்டது. நீதிபதி ஹனி எம்.வர்க்கீஸ் தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில்,   பல்சர் சுனி உள்ளிட்ட நடிகையை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்ததில் நேரடியாக தொடர்பில் இருந்த 6 பேர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.  குற்றம் சட்டப்பட்டவர்கள் பட்டியலில் 7 முதல் 10 வரையுள்ளவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 8-வதாக இருந்த நடிகர் திலீப் மீதான குற்றம் தெளிவாகவில்லை எனக்கூறி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு வரும் 12-ம் தேதி தண்டனை அறிவிக்கப்படும் என கோர்ட் தெரிவித்துள்ளது.

'பாகிஸ்தான் ஜெயிலில் மலர்ந்த காதல்?' - எல்லை தாண்ட முயன்ற ஆந்திரா இளைஞர் கைது - என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனப்பகுதியில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை நகரமான பிகானேரில் உள்ள 17 கே.ஒய்.டி (17 KYD) பகுதிக்கு அருகில் பாகிஸ்தானுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறப்படும் ஓர் இ... மேலும் பார்க்க

ஒரு சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு மற்றொரு சிறுமியுடன் எஸ்கேப் - கேரள வாலிபரை தூக்கிய குமரி போலீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு மீனவர் கிராமத்தை சேர்ந்த 17-வயது சிறுமி குடும்ப வறுமை காரணமாக படிப்பை கைவிட்டுவிட்டு அந்த பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த நவம்பர்... மேலும் பார்க்க

`மஞ்சு வாரியர் கூறியதைத் தொடர்ந்துதான் எனக்கு எதிரான கூட்டுச் சதி' -தீர்ப்பு குறித்து நடிகர் திலீப்

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திலீப் உள்ளிட்ட 10 பேரும் வழக்கு நடைபெற்றுவரும் எர்ணாகுளம் பிரி... மேலும் பார்க்க

நெல்லை: `லஞ்ச புகாரில் சிக்கவைக்க சதி' - அலுவலகத்தில் பணம் வைத்தவர் கைது; விசாரணையில் அதிர்ச்சி

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் தீயணைப்புத்துறை மண்டலம் இயங்கி வருகிறது. இங்கு துணை இயக்குனராக சரவண பாபு பணிபுரிந்து வருகிறார். கடந்த மாதம் 18-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் இந்த அலுவலகத்தில் திடீர் சோதனை நட... மேலும் பார்க்க

திருப்பதி: `ரூ.100 கோடி காணிக்கையை திருடியது உண்மைதான்' - தேவஸ்தான கிளர்க் வாக்குமூலம்!

திருப்பதி தேவஸ்தானத்தின் திருமலை பெத்த ஜீயர் மடத்தில் கிளார்க்காக பணியாற்றிக் கொண்டிருந்தவர் ரவிக்குமார். இவர் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி இந்திய மதிப்பில் 72,000 அமெரிக்க டாலரை திருட முயன்றபோது க... மேலும் பார்க்க

கரூர்: `வாரிசு சான்றிதழுக்கு ரூ.3000 லஞ்சம்' -கறாராக கேட்டு வாங்கிய விஏஓ கைது

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக... மேலும் பார்க்க