செய்திகள் :

IPL: டீல் ஓகே ஆனால் கேப்டன் பதவி வேண்டும் - டிமாண்ட் வைக்கிறாரா ஜடேஜா?

post image

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலமானது வரும் டிசம்பர் இரண்டாம் வாரம் நடைபெற இருக்கிறது.

இதனிடையே நவம்பர் 15 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட வேண்டும் என ஏற்கனவே ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்திருந்தது.

இதன் காரணமாக இன்னும் சில தினங்களில் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைக்கப்போகும் மற்றும் விடுவிக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபிஎல்
ஐபிஎல்

அதற்கு முன்னதாக வீரர்களின் டிரேடிங் முறையும் நடைமுறையில் உள்ளதால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இடம் மாறுவார்கள் என்றும் பேசப்பட்டு வந்தது.

அதிலும் குறிப்பாக நட்சத்திர வீரர்கள் சிலர் டிரேடிங் செய்ய வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வந்த நிலையில் ராஜஸ்தான் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி வாங்க இருப்பதாகவும், சாம்சனுக்கு மாற்றாக சென்னையிலிருந்து ரவீந்திர ஜடேஜா, சாம் கரண் ஆகியோரை ராஜஸ்தான் அணி வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் News 18 Cricket Next வெளியிட்டிருக்கும் தகவலின்படி ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணிக்கு செல்ல ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும், ஆனால் அந்த அணியின் கேப்டன் பதவியைக் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சாம்சன் தான் செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் சாம்சனுக்கு காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டிருந்தார்.

சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா
சஞ்சு சாம்சன் - ரவீந்திர ஜடேஜா

ராஜஸ்தான் அணி நிர்வாகமும் ரியான் பராக்கை வருங்காலத்திற்கான ஆப்சனாக பார்த்தது. ரியான் பராக் தவிர்த்து யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அந்த அணியில் கேப்டன் கனவோடு இருக்கிறார்.

இவர்கள் இருவரும் இளம் வீரர்கள். இன்னும் பல சீசன்களுக்கு இவர்களை நம்பலாம். ஆனால், ஜடேஜா ஓய்வு பெறும் நிலையில் இருக்கிறார். அவரை இந்த சமயத்தில் கேப்டன் ஆக்க ராஜஸ்தான் நிறுவனம் கொஞ்சம் யோசித்துதான் முடிவெடுக்கும்.

``நான் பார்த்து வியந்த ரஜினி சார் போனில் அழைத்து பேசினார்'' - நெகிழ்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர்

மகளிர் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இன்று(நவ.13) சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "சிற... மேலும் பார்க்க

``திருமணத்திற்குப் பிறகு கோலியிடம் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன" - முன்னாள் சக வீரர் பகிர்வு

விராட் கோலி, கிரிக்கெட் உலகில் இந்தியாவைக் கடந்து உலக அளவில் பல தசாப்தங்களுக்கு ஒலிக்கும் பெயர்.சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களில் சதமடித்திருக்கும் சச்சினின் சாதனையை முறியடிக்கும் ஒரே வீரராகப் பார்க்கப... மேலும் பார்க்க

Pratika Rawal: ஜெய்ஷா அனுப்பிய மெஸ்ஸேஜ்; பதக்கத்தை உறுதி செய்த வீராங்கனை!

இந்திய மகளிர் அணியின் ஓப்பனிங் பேட்டர் பிரதிகா ரேவால் (Pratika Rawal) தான் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 வெற்றியாளர்களுக்கான பதக்கத்தைப் பெறுவதை சமீபத்திய நேர்காணலில் உறுதிபடுத்தியுள்ளார். உலகக் கோப்... மேலும் பார்க்க

`ஷமியின் கரியரை முடிக்கும் BCCI தேர்வுக் குழு’ - வெளிப்படையாக பேசிய பெர்சனல் கோச்!

2023-ல் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா இறுதிப்போட்டி வரை சென்றதென்றால் அதற்கு முக்கிய காரணமானவர்களில் ஒருவர் முகமது ஷமி.வெறும் ஏழே போட்டிகளில் 10.7 ஆவரேஜில் மூன்று முறை ... மேலும் பார்க்க

`தோனி ஓய்வு பெறுகிறாரா?' - சிஎஸ்கே காசி விஸ்வநாதனின் 'சிக்ஸர்' பதில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு வரை சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனி,... மேலும் பார்க்க