சர்வதேச தரத்தில் அனிமேஷன் படத்தை உருவாக்கிய தமிழர் - 'மிஷன் சான்டா'வில் எடிட்டர்...
ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - வீடியோ ஆதாரத்தால் சிக்கிய போலீஸ்காரர்
கோவை ஆர்எஸ்புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ஷேக் அப்துல்லா. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார். பணியை முடித்துக் கொண்டு இன்டர்சிட்டி ரயில் மூலம் சென்னையில் இருந்து கோவை திரும்பியுள்ளார்.

அதே ரயிலில் கோவையை பூர்விகமாக கொண்டவரும், சென்னையில் சட்ட கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும் பயணித்துள்ளார்.
அந்த ரயில் காட்பாடி ரயில் நிலையம் அருகே செல்லும்போது, ஷேக் அப்துல்லா மாணவியின் அருகே அமர்ந்துள்ளார். தொடர்ந்து அவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த மாணவி அந்த நிகழ்வை தன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அந்த மாணவி ரயில்வே காவல்துறையிடம் புகாரும் அளித்துள்ளார்.
காட்பாட்டி ரயில் நிலையத்தில், சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிக்கு வந்த காவல்துறையினர் ஷேக் அப்துல்லாவிடம் விசாரணை நடத்தினார்கள். வீடியோ ஆதாரத்துடன் சிக்கியதால் ரயில்வே காவல்துறையினர் ஷேக் மீது வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து சேக் அப்துல்லாவை காவல்துறையில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.


















