செய்திகள் :

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

post image

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவியர் மற்றும் மாணவர்களுக்காக தனித்தனியாக 4 சமூகநீதி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 50 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இயங்கி வந்த விடுதியில் மாரிமுத்து என்பவர் வார்டனாக பணியாற்றி வருகிறார். ஆனால் அவர் அங்கு தங்காமலும், சரிவர வேலைக்கு வராமலும் இருந்துள்ளார்.

தனக்குப் பதிலாக விடுதி பணிகளை கவனிக்க, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் (23) என்ற அந்த விடுதியின் முன்னாள் மாணவரை மாதம் ரூ.5,000 ஊதியத்திற்கு மாரிமுத்து விதிகளை மீறி பணி அமர்த்தியுள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

கடந்த ஒராண்டாக வார்டனாக அரவிந்தன் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், காங்கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை குழந்தைகள் தின விழா நடைபெற்றுள்ளது. இதில், திருப்பூர் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மருத்துவ முகாம் நடத்தினர்.

அப்போது, வார்டனாக செயல்பட்டு வரும் அரவிந்தன் தங்களுக்கு ஆபாசப் படங்களைக் காட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாக சில மாணவர்கள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, அந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களிடம் சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில், 6 மற்றும் 8ஆம் வகுப்புகளில் பயிலும் 8-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அரவிந்தன் தனது செல்போனில் ஆபாசப் படங்களைக் காட்டியும், மேலும் சில சிறுவர்களை தன்பாலின உறவுக்கு தொல்லை கொடுத்தும் தெரியவந்தது.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் சமூகநீதி விடுதிக்கு நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

காங்கேயம்
காங்கேயம்

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சிவகுமார் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், தனது செல்போனில் ஆபாசப் படங்களைக் காட்டி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, அரவிந்தனை போலீஸார் கைது செய்தனர். மேலும், அரவிந்தனை சட்டவிரோதமாக பணியமர்த்திய மாரிமுத்து மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

சமூகநீதி விடுதியில் சட்டவிரோதமாக வார்டனாக பணியமர்த்தப்பட்ட இளைஞர், அங்கு தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 22.06.2020-ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர... மேலும் பார்க்க

செல்போன் செயலி மூலம் பழக்கம்; வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டிய நபர் - கைதுசெய்த போலீஸ்!

சென்னையைச் சேர்ந்த 21 வயதாகும் இளம்பெண்ணுக்கு செல்போன் செயலி ஒன்று மூலம் லிபின்ராஜ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஒருகட்டத்தில் இளம்பெண்ணை லிபின்ராஜ் காதலிப்பதா... மேலும் பார்க்க

பரமக்குடி: காரில் வந்து ஆடு திருட்டு; ஓட்டம் பிடித்த தம்பதியை விரட்டி பிடித்த போலீஸார்!

பரமக்குடி எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் சரசு. இவர் நேற்று முன் தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிலருடன் அம்மன் கோயில் மற்றும் மாமாங்க தெப்பகுளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிர... மேலும் பார்க்க

நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?

கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை... மேலும் பார்க்க