செய்திகள் :

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' - சிறப்பு என்ன?

post image

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்று முடிந்தன. இந்த விழாவில், உள்நாடு மட்டுமின்றி குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள், என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர்.

வெள்ளிக்காசு மாலை
வெள்ளிக்காசு மாலை

திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறிட நேர்த்திக்கடனாக உண்டியல் காணிக்கைகளை செலுத்தி இருந்தனர். அந்த உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள், திருக்கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.  இதில், ரூ.4,26,22,507 ரொக்கப் பணமும், 1.279 கிலோ தங்கமும், 30.857 கிலோ வெள்ளியும், 46.312 கிலோ பித்தளையும், 7.77 கிலோ செம்பும், 8.91 கிலோ தகரமும் காணிக்கையாக கிடைத்துள்ளன. அத்துடன் 1,421 வெளிநாட்டு கரன்சிகளும் கிடைத்துள்ளன.

இதில், காணிக்கைகளுக்கு நடுவே 54 வெள்ளிக்காசுகள் கொண்டு கோர்க்கப்பட்ட மாலை ஒன்று கிடைத்துள்ளது. அந்த வெள்ளி மாலை, இரண்டு அடுக்காக உள்ளது. அதில் ஒரு புறத்தில் சரஸ்வதி, லட்சுமி மற்றும் விநாயகர் உருவமும், மறுபுறம் முருகனின் அட்சரமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள், திருக்கோயில் அதிகாரிகள் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

சரஸ்வதி- லெட்சுமி- விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுமாலை
சரஸ்வதி- லெட்சுமி- விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளிக் காசுமாலை

தமிழகத்திலுள்ள முதுநிலை கோயில்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கைகள் மாதந்தோறும் எண்ணப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வெள்ளிக்காசுகள் கொண்ட மாலை கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியாளர்கள்.

குற்றாலம், இலஞ்சி முருகன் கோயில்: வேண்டும் வரம்தரும் மாதுளை முத்துகளால் ஆன வேல் காணிக்கை!

தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமான் அடியார்களின் குரலுக்கு ஓடி வருபவர். அப்படி அவர் ஓடி வந்து அருள் செய்த தலங்களில் ஒன்று இலஞ்சி. தமிழகத்தின் எல்லைப்புற ஊர்களில் ஒன்று செங்கோட்டை. இயற்கை ... மேலும் பார்க்க

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் : பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ தேங்காய் மாலை!

பிரதோஷ காலத்தில் வழிபாடுகள் சிவாலயங்களில் சிறப்பாக நடைபெறும். வைணவ ஆலயங்களில் நரசிம்ம மூர்த்திக்கு விசேஷ வழிபாடுகள் உண்டு. ஆனால் விநாயகருக்குப் பிரதோஷ வழிபாடுகள் விசேஷமாக நடைபெறும் தலம் ஒன்று உண்டு. அ... மேலும் பார்க்க

சிதம்பரம், ஓமாம் புலியூர் துயர்தீர்த்த நாதர் கோயில்: மீன ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய குருஸ்தலம்!

தட்சிணாமூர்த்தியே குருவடிவம். அவரை வழிபட்டால் சகலவிதமான ஞானமும் கிடைக்கும். மேலும் வாழ்வில் இருக்கும் தடைகள் விலகி நன்மைகள் கூடிவரும். சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தி விசேஷ வடிவுடன் அருள்பாலிப்பார். அப... மேலும் பார்க்க

தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தரைக் கடித்த நாய்; பணியாளர்களின் அலட்சியமா?

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்கிவருகிறது. இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்ககளும், விடுமுறை மற்றும் வ... மேலும் பார்க்க

திருவள்ளூர், பேரம்பாக்கம் சோழீஸ்வரர் ஆலயம்: 6 வாரம் வேண்டுதல் செய்ய நரம்பு பிரச்னை தீர அருளும் ஈசன்!

சென்னையிலிருந்து 60 கி.மீ தொலைவிலும் திருவள்ளூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது பேரம்பாக்கம். இங்கே ஈசன் சோழீஸ்வரர் என்கிற திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். நரம்பு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் ப... மேலும் பார்க்க

திருவள்ளூர் திருவாலங்காட்டு வடாரண்யேசுவரர் கோயில்: திருவடி தரிசனம்; முக்தி தலம்; ரத்னசபை ரகசியங்கள்!

சைவர்களின் மோட்ச ஸ்தலம் என்று போற்றப்படும் தலம் திருவாலங்காடு. பஞ்ச சபைகளில் மூத்ததான ரத்தின சபை இங்குதான் உள்ளது. உத்திரகோசமங்கை, திருவாரூரைப் போல இதுவும் தோன்றிய காலத்தை அறிய முடியாத பழம்பதி. நாலூர்... மேலும் பார்க்க