செய்திகள் :

நீலகிரி: ``இந்த திட்டம் வெற்றி பெற்றால் வனங்கள் அனைத்தும் வளமாகும்'' - வனத்துறை

post image

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தேயிலை, காஃபி, மலை காய்கறிகளை இங்கு அறிமுகம் செய்ததுடன், அழகுத் தாவரம் என்கிற பெயரில் மேலை நாடுகளில் இருந்து பல்வேறு வகையான தாவரங்களையும் அறிமுகப்படுத்தினர்.

எரிபொருளாகும் உண்ணிச் செடிகள்
எரிபொருளாகும் உண்ணிச் செடிகள்

அதில் ஒன்றுதான் 'lantana camara' எனப்படும் உண்ணிச் செடிகள். பிரிட்டிஷ் குடியிருப்புகளில் இருந்து மெல்ல பரவி வனப்பகுதிகளில் ஊடுருவிய உண்ணிச் செடிகள், இன்றைக்கு பல்கிப் பெருகி அழிக்க முடியாத அந்நிய களைத்தாவரமாக உருவெடுத்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் யானை வழித்தடங்கள் முதல் புல்வெளிகள், பூர்வீகத் தாவரங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக கபளீகரம் செய்து வரும் இந்த உண்ணிச் செடிகளை முற்றாக அகற்றக் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

எரிபொருளாகும் உண்ணிச் செடிகள்

இந்த நிலையில் தான் தேயிலை தொழிற்சாலைகளுக்கான எரிபொருளாக மாற்றும் புது முயற்சியை கையில் எடுத்திருக்கிறது வனத்துறை.

முதுமலை பழங்குடி மக்களுக்கும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக அவர்களை வைத்தே உண்ணிச் செடிகளை அகற்றி வருகின்றனர்.

அகற்றப்பட்ட உண்ணிச் செடிகளை இயந்திரங்களின் உதவியுடன் பொடியாக்கி கம்ப்ரஸர்கள் மூலம் கட்டிகளாக மாற்றி வருகின்றனர்.

தேயிலைத் தூள் தயாரிக்க சிறந்த எரிபொருளாக உண்ணிச்செடிகள் மாறி வருவதால், தேயிலை தொழிற்சாலைகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது குறைவதுடன் ஏக்கர் கணக்கில் பரவிக்கிடக்கும் உண்ணிச் செடிகளும் அழிந்து வருகின்றன.

எரிபொருளாகும் உண்ணிச் செடிகள்

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர்,

"நீலகிரியின் வன வளங்களை அழிக்கும் மிகப்பெரிய அழிவு சக்தியாக அந்நிய களைத்தாவரங்கள் உருவெடுத்து வருகின்றன. நம்முடைய மண்ணுக்கே உரித்தான உள்ளூர் தாவரங்களை அழித்து வனவிலங்குகளுக்கு உணவு, தண்ணீர் தேவைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

பார்த்தீனியம், உண்ணி உள்ளிட்ட பல அந்நிய களைத்தாவரங்கள் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இவற்றை முற்றாக ஒழிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீவிரமான வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் உண்ணிச் செடிகளையும் அகற்றி வருகிறோம். பழங்குடிகள் மூலம் அகற்றப்படும் உண்ணிச் செடிகளை உலர்த்தி இயந்திரங்கள் மூலம் உருளை வடிவ எரிபொருள் கட்டிகளாக மாற்றி வருகிறோம்.

ஒரு டன் எரிபொருள் கட்டி ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எரிபொருளாகும் உண்ணிச் செடிகள்
எரிபொருளாகும் உண்ணிச் செடிகள்

கூடலூரில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு முதல்கட்டமாக இந்த எரிபொருள் கட்டிகளை விற்பனை செய்து வருகிறோம். டீ தூள் தயாரிக்க மாற்று எரிபொருளாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இந்த திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக்கப்பட்டால் வனங்கள் அனைத்தும் வளமாகும்" என்றனர்.

Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரியுமா?

சிலந்திகள் சிக்கலான வலைகளைப் பின்னி அதைத் தங்கள் இருப்பிடமாகவும், இரையைப் பிடிக்கும் பொறியாகவும் பயன்படுத்துகின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பழைய அல்லது சேதமடைந்த வலைகளை அவை உண்பது குறித்து ... மேலும் பார்க்க

நீலகிரி: கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் சிறுத்தை - போராடி மீட்ட வனத்துறை

நீலகிரியில் அதிகரித்து வரும் காடழிப்பு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. தடுப்பு வேலிகள், சுருக்கு கம்பிகள், மின் வேலிகள் போன்றவற்றில் சிக்கி வனவ... மேலும் பார்க்க

ஊட்டி: டாஸ்மாக் பாராக மாறிய நீர்நிலை - வனவிலங்குகள் பாதிப்பு; வனத்துறை, வருவாய்த்துறை அலட்சியம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி அணை. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அணையிலிருந்து அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு ... மேலும் பார்க்க

1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?

ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த... மேலும் பார்க்க

நுரையீரல் இல்லாமலும் சுவாசிக்கும் தவளைகள் - சுவாரஸ்யத் தகவல்கள்

தவளைகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினம் என்று பலருக்கும் தெரியும். அவை நுரையீரல்கள் இல்லாமலேயே தங்கள் தோல் மூலம் சுவாசிக்கும் திறன் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விரிவாக தெ... மேலும் பார்க்க

தென்காசி: யானை - மனித மோதல்களைத் தடுக்க பூர்வீகத் தாவரங்கள் நடவு; வனத்துறை திட்டத்தின் பின்னணி என்ன?

தென்காசி மாவட்டத்தில், சமீபகாலமாக மனித-யானை மோதல் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. உணவுத் தேவைக்காக யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவது, இங்குள்ள விளை நிலங்களைச் சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து ... மேலும் பார்க்க