செய்திகள் :

"தூய்மைப் பணியாளர்களுக்கான தேவையை திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்"- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

post image

தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம், குடியிருப்பு வீடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "நாம் என்ன தான் சத்துணவு, டயட், உடற்பயிற்சி என்று இருந்தாலும், ஆரோக்கியமாக வாழ்வதற்கு அடிப்படையாக இருப்பது தூய்மை தான். சென்னை மாநகரம் வெள்ளம், புயல் போன்ற எந்த பேரிடரையும் எதிர்கொண்டாலும், அதிலிருந்து மீண்டுவர தூய்மைப் பணியாளர்களின் பணி தான் மிகவும் முக்கியமான ஒன்று. 

தூய்மைப் பணியாளர்களின் மாண்பு காக்கப்பட வேண்டும், வாழ்க்கை தரம் உயர்ந்து, நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இது தான் சமூகநீதி. இந்த சமூக நீதிப் பயணத்தில் உங்கள் சுயமரியாதையை காத்து அவர்களின் பசியை போக்குவதற்காகத்தான் இந்த முதலமைச்சர் உணவு திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

உடல் பரிசோதனை, மாற்று வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை தடையின்றி வழங்கும் வகையில், ரூ.50 கோடிக்கு அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் நிறைய நலத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவ்வளவு செய்தாலும் உங்களுக்கான தேவை இன்னும் நிறைய இருக்கிறது என்று எனக்கு தெரியும். அதையெல்லாம் திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும்.

நீங்கள் செய்வது வேலை அல்ல சேவை. ஊரே அடங்கிய பிறகும் ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் தூய்மைப் பணியாளர்கள்தான். உங்களது அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பார்த்து நான் மட்டுமல்ல இந்த மாநாகரமே நன்றியுடன் உங்களை வணங்குகிறது" என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

வளர்ப்பு நாய் கடித்ததில் ஈரோடு இளைஞர் உயிரிழப்பு - ரேபிஸ் பரவ காரணம் என்ன?

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அருகே உள்ள கனகபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் ரமேஷ். இவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷை கடந்த 10 நாள்களுக்கு முன் அவர் வீட்டில் வளர... மேலும் பார்க்க

தெலங்கானா இடைத்தேர்தல்: டெபாசிட்டை பறிகொடுத்த பாஜக - காங்கிரஸ் அபார வெற்றி!

தெலங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏ மகந்தி கோபிநாத் மாரடைப்பால் இறந்ததால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.இந்த இடைத்தேர்தலுக்காக தெலங்கானாவில் ஆளும் காங்கிரஸ் கட்சி, வி. நவீன் ... மேலும் பார்க்க

"பணம், பவர், சாதி; நடிகர்கள் அரசியலில் செய்யும் தவறு என்ன?" - விஜய்க்கு அறிவுறை சொன்ன ரோஜா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. 1999-ஆம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து உள்ளாட்சி அரசியலில் களப்பணிகள், பிரசாரப் பணிகளைச் ச... மேலும் பார்க்க

"ஹைதராபாத் சாலைகளுக்கு 'Google, Meta, TCS' என பெயர் வைப்போம்" - தெலங்கானா CM ரேவந்த் சொல்வதென்ன?

உலகளாவிய பெருநிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதிலும், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொண்டுவரவும் ஆந்திரா, தெலங்கனா மாநிலங்கள் போட்டிபோட்டு வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் தொழில்நுட்... மேலும் பார்க்க

மாமல்லபுரம்: விழுந்து நொறுங்கிய விமானப்படை பயிற்சி விமானம் - பாராசூட் மூலம் உயிர் தப்பிய விமானிகள்

மாமல்லபுரம் அருகே திருப்போரூரில் இந்திய விமானப்படையின் பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியிருக்கிறது.விமானத்தில் இருந்த மூவர் ஆபத்தை உணர்ந்து விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குத... மேலும் பார்க்க