செய்திகள் :

தென்காசி: 3 ஆண்டுகளாக கோழிப்பண்ணையில் இயங்கிய வெடிமருந்து குடோன்; சிறுவனால் சிக்கியது எப்படி?

post image

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவன் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, அச்சிறுவனின் வாகனத்தை நிறுத்தி போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீஸார், சிறுவன் வைத்திருந்த பார்சலைப் பிரித்துப் பார்த்துள்ளனர். அதில், வெடிமருந்து இருந்துள்ளது.

இதுகுறித்து அச்சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சேர்ந்தமரம் அருகிலுள்ள ஒரு கோழிப்பண்ணை வெடிமருந்து குடோன் செயல்படுவதாகக் கூறியுள்ளான்.

சேந்தமரம்
சேந்தமரம்

தொடர்ந்து பொய்கையிலிருந்து கரடிகுளம் செல்லும் சாலையில் இடைகாலைச் சேர்ந்த ஒரு நபருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் சோதனை நடத்தியுள்ளனர். அதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தனிப்பிரிவு போலீஸார், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு வெடிமருந்துகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் 3 ஆண்டுகளாக அனுமதியில்லாமல் கோழிப்பண்ணையில் வெடிமருந்து பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதும், சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரித்ததும் தெரியவந்தன.

இதனையடுத்து போலீஸார், கோழிப்பண்ணைக்குச் சீல் வைத்தனர். அத்துடன் வெடிமருந்து குடோன் நடத்தி வந்தவரைத் தேடி வருகின்றனர்.

சேர்ந்தமரம் காவல்நிலையம்

ஒதுக்குப்புறமாக உள்ள இது போன்ற பண்ணைகளில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது சோதனை நடத்த வேண்டும், தனிப்பிரிவு போலீஸார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அதே போல இப்பகுதிகளில் இரவு நேரங்களில் முகமுடி அணிந்த கொள்ளையர்கள் கொள்ளைச் சம்பவங்களிலும், தெருவிளக்கு எரியாத சாலைகளில் வழிப்பறியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்படி?

சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 0... மேலும் பார்க்க

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க

சேலத்தில் மருத்துவ மாணவி கொலை; காதல் விவகாரமா? தந்தையைத் தேடும் போலீஸ்! - நடந்தது என்ன?

சேலத்தை அடுத்த சித்தர்கோயில் அருகில் தனியார் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்த வரதராஜன் என்பவரின் மகள் வர்ஷின... மேலும் பார்க்க