செய்திகள் :

பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்

post image

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் இர்ஷாத் என்பவர் சாம்ராவட்டத்தில் நடத்தி வந்த படிப்புக்காக வெளிநாட்டுக்கு ஆட்சேர்க்கும் நிறுவனத்தில் கடந்த நவம்பர் 11-ம் தேதி போலீஸார் அதிரடியாக ஆய்வு செய்தனர். அதில், வெவ்வேறு இடங்களுக்கு கூரியர் மூலம் அனுப்புவதற்காக வைத்திருந்த சுமார் 100 போலி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸார் விரிவாக விசாரணை நடத்தியதில் பொள்ளாச்சியில் வைத்து போலி சான்றிதழ்கள் பிரிண்ட் செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், பொன்னானியில் வைத்து பணம் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. பொன்னானியில் போலீஸார் நடத்திய விசாரணையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட போலி சீல்-கள், துணை வேந்தர்களின் சீல்கள், அதி நவீன கம்ப்யூட்டர்கள், பிரிண்டிங் மிஷின்கள் மற்றும் சுமார் ஒரு லட்சம் போலி சான்றிதழ்களும் கண்டுபிடிக்கப்பட்டன. 

போலி சான்றிதழ்கள் அச்சடித்த கும்பலைச் சேர்ந்தவர்கள்

இந்த கும்பலுக்கு தலைவன் என கருதப்படும் மீனடத்தூர் பகுதியைச் சேர்ந்த தனீஷ் தர்மன்(38), பொன்னானி இர்ஷாத்(39), ராகுல்(30), பய்யனங்காடி அப்துல் நிஷார்(31), நெடுமங்காட்டைச் சேர்ந்த ஜஸீம்(31), ரதீஷ்(37), ஷபீக் (37) தமிழ்நாட்டின் சிவகாசியைச் சேர்ந்த ஜமாலுதீன்(40), வெங்கடேஷ் (24), விருதுநகரைச் சேர்ந்த அரவிந்த்குமார் (24) ஆகியோர் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் போலி சான்றிதழ்களுக்கான ரூ.50,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலித்துவந்தது தெரியவந்தது. முக்கிய குற்றவாளி என கருதப்படும் தனீஷ் தர்மனுக்கு திரூரில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர பங்களா, புனேவில் இரண்டு ஐந்து நட்சத்திர பார்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளும் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கோடிக்கணக்கான மதிப்புள்ள வணிக நிறுவனமும், அடுக்குமாடி குடியிருப்புகளும் அவர் நடத்திவருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தனீஷ் தர்மன் தனது பெயரை டானி எனக்கூறிக்கொண்டு போலி சான்றிதழ் தயாரித்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

போலி சீல்களை கைப்பற்றிய போலீஸ்

காவல்துறையினரால் பிடிபட்ட போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பல் இதுவரை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு சான்றிதழ்களை விநியோகித்துள்ளதாக கண்டறிந்துள்ளது. கேரள மாநிலம் மட்டும் அல்லாது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சான்றிதழ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. தனீஷ் தர்மன் பொள்ளாச்சியில் அலுவலகம் எடுத்து சிவகாசியில் பிரிண்டிங் தொழிலில் உள்ள சிலரை வேலைக்கு அமர்த்தி போலி சான்றிதழ் அச்சடித்துள்ளது தெரியவந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட போலி சான்றிதழ்களை அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி பரிசோதிக்கும் படலத்தில் போலீஸார் இறங்கியுள்ளனர். அதுமட்டுமல்லாது போலி சான்றிதழ்களை பயன்படுத்தி அரசு வேலைகளில் யாராவது சேர்ந்துள்ளனரா எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`93 பேர் மட்டுமே வசிக்கும் மாஞ்சோலையில் 1,100 வாக்காளர்கள் பதிவேற்றம்?' - அலுவலர்களுக்கு நோட்டீஸ்

நெல்லை மாவட்டம், பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி சார்பில் மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை, காபி பயிர் செய்யப்பட்டுள்ளன. இந்தப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இந்த வ... மேலும் பார்க்க

``மதுக்கடை அடைக்கும் நேரம், அவசரத்தில்'' - ரயிலின் குறுக்கே டூவீலரில் பாய்ந்த இளைஞர்

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு கன்னியாகுமரி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் உச்சிப்புளி ரயில் நிலையத்தை கடக்க இருந்த நிலையில், அப்பகுதியில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலை... மேலும் பார்க்க

``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ர... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த தந்தை - ராமநாதபுரத்தில் சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்ள மோட்டார் மின் சுவிட்சினை பழுது பார்த்து... மேலும் பார்க்க

ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அந்தியூர் மேல்தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத... மேலும் பார்க்க