BB Tamil 9: "ஒண்ணாம் க்ளாஸ் புத்தகத்தை படிச்சிருந்தாக்கூட.!" - விஜய் சேதுபதி
BB TAMIL 9: `அது வேற ஷோ இது வேற ஷோ’ இந்த வார எவிக்ஷன் - வெளியேறிய டைட்டில் வின்னர்?
விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஏழு பேர் வெளியேறியுள்ளனர்.
நந்தினி பிக்பாஸ் வீடு செட் ஆகாததால் முதல் வாரத்திலேயே வெளியேறினார்.
பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன் ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் எவிக்ஷன் மூலம் வெளியேறினர்.

முன்னதாக இந்த சீசனில் போட்டியாளர்களாக சமூக ஊடக பிரபலங்கள் பெரும்பாலான எண்ணிக்கையில் இருந்ததால் நிகழ்ச்சி சற்று டல் அடிப்பதாக ஒரு பேச்சு உலா வந்தது. இந்த நிலையில் தான் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் சாண்டா, பிரஜின், அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகிய சின்னத்திரை பிரபலங்கள் நிகழ்ச்சிக்குள் சென்றனர்..
ஆரம்பத்தில் ஆளாளுக்கு தனித் தனியாக சண்டை பிடித்து வந்த நிலையில் இப்போது சிலர் குரூப் சேர்ந்திருப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள பிக்பாஸ் செட்டில் துவங்கி நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி கலந்து கொண்டு வழக்கமான விசாரிப்புகளை நிகழ்த்தினார்.
சிலருக்கு குட்டும் சிலருக்கு பாராட்டும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து எவிக்ஷனுக்கான நேரம் வந்தது. சுபிக்ஷா, கனி, ரம்யா, திவ்யா, சாண்ட்ரா, விக்ரம், வியானா, அரோரா, பார்வதி, திவாகர் உள்ளிட்ட பத்து பேர் நாமினேஷன் பட்டியலில் இருந்த சூழலில் ரசிகர்களின் ஒட்டுகள் அடிப்படையில் தற்போது கனி வெளியேறி இருப்பதாகத் தெரிய வருகிறது.

இயக்குநர் அகத்தியனின் மகளான கனி குக் வித் கோமாளி இரண்டாவது சீசனின் டைட்டில் வின்னர் ஆவார்.
ஆனால் அது வேற ஷோ இது வேற ஷோ என நினைத்தாரா தெரியவில்லை, பிக்பாஸ் ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்றே சொல்லலாம்.
கனி வெளியேறிய எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


















