செய்திகள் :

வலுவடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி! - தமிழ்நாட்டில் 4 நாள்களுக்கு கனமழை; எந்தெந்த மாவட்டங்களில்?

post image

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவியது.

அது இன்று வளிமண்டல மேலடக்கு சுழற்சியுடன் கூடிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் அது வடமேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், அது மேலும் வலுப்பெற்று, 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி வரலாம்.

மழை - கோப்புப் படம்
மழை - கோப்புப் படம்
இதனால் சென்னை வானிலை மையம் தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.

நாளை மறுநாள் (நவம்பர் 28) தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள கடலோர பகுதிகளிலும், உள் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

வரும் நவம்பர் 29-ம் தேதி, வட தமிழ்நாட்டில் பல இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யலாம். ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

மழை
மழை

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

புதுக்கோட்டை, திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யலாம்.

வரும் நவம்பர் 30-ம் தேதி வட தமிழ்நாட்டில் பல இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யலாம்.

திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம்.

எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?

கிட்டத்தட்ட 12,000 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று முன்தினம் (நவம்பர் 23) எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் இருந்து சிதறிய சாம்பல் சிவப்பு கடல் வழியாக ஏமன் ... மேலும் பார்க்க

Rain Alert: ``கடலுக்கு செல்ல வேண்டாம்; 48 மணி நேரத்தில் புயலாக வலுபெறும்'' - வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ... மேலும் பார்க்க

Rain Alert: தமிழ்நாட்டில் இந்த வாரம் முழுவதும் மழை; சென்னைக்கு 'ஆரஞ்சு அலர்ட்' - எப்போது தெரியுமா?

இந்த வாரத்திற்கான வானிலை அப்டேட்டை வழங்கியுள்ளது இந்திய வானிலை மையம். இந்த வாரம் முழுவதுமே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இன்று தென்காசி, திருநெல்வ... மேலும் பார்க்க

Rain Alert: உருவாகும் சென்யார் புயல்; தொடரும் கனமழை; எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்குள் நுழைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.இது வ... மேலும் பார்க்க

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்!

நெல்லையில் பெய்து வரும் தொடர் கனமழை | கரை புரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு | ட்ரோன் காட்சிகள்.! மேலும் பார்க்க

Rain Alert: "இந்த 16 மாவட்டங்களில் இன்று காலை கனமழைக்கு வாய்ப்பு" - வானிலை ஆய்வு மையம் தகவல்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (நவ.22) காலை தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கிற... மேலும் பார்க்க