செய்திகள் :

காவலர் எழுத்துத் தேர்வு; செல்போன் மூலம் காப்பியடித்தவர் கைது

post image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நேற்று காலையில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திலும் மொத்தம் 8 தேர்வு மையங்களில் நடைபெற்றது. தேர்விற்கு 5,864 ஆண்கள் மற்றும் 2,047 பெண்கள் என மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தம் 7,911 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் 5,171 ஆண்கள் மற்றும் 1,745 பெண்கள் என மொத்தம் 6,916 பேர் தேர்வெழுதினர். இத்தேர்விற்கு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மேற்பார்வையில் சுமார் 800 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மோசடியாகத் தேர்வெழுதியவர்கள்
மோசடியாகத் தேர்வெழுதியவர்கள்

இந்நிலையில் தென்காசியை அடுத்துள்ள இலஞ்சி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் செயல்பட்ட தேர்வு மையத்தில் இரு இளைஞர்கள் முறைகேடாகத் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக தேர்வு மையத்திற்குள் செல்லும் தேர்வர்கள் அனைவரையும் போலீசார் முழுமையாக சோதனை செய்து செல்போன், வாட்ச், கால்குலேட்டர் மற்றும் எவ்வித எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் இல்லாத அளவில் சோதனைக்குப் பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் இலஞ்சியில் தனியார் பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் இருவர் தேர்வு அறைக்குள் செல்போன்களை கொண்டு சென்றதும் கேள்வித்தாள்களை செல்போனில் படம் பிடித்து அதை வெளியில் இருந்த நபர் ஒருவருக்கு அனுப்பியுள்ளனர்.

காவலர் தேர்வு

பின்னர் அவர் அனுப்பிய பதில்கள் மூலம் கேள்விகளுக்கான பதிலை எழுதியதாகவும் தேர்வு மையத்தில் இருந்த தேர்வு மைய அலுவலர் கண்டறிந்து போலீசில் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து குற்றாலம் போலீசார் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்பட்ட சிவகிரியைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் மற்றும் பாண்டியராஜ் என இரு இளைஞர்களையும், தேர்வு எழுத வெளியில் இருந்து உதவிய பெண் மல்லிகா என்பவரையும் உட்பட மூவரை காவல் நிலையம் அழைத்து சென்று தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டதில் முறைகேடு ஏதும் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது.

திருச்சி: அரிவாளோடு துரத்திய கும்பல்; தப்பிக்க காவலர் குடியிருப்பில் புகுந்த இளைஞர் வெட்டி படுகொலை

திருச்சி மாநகரம், பீமநகர் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(25). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பீமநகர் அருகே உள்ள மார்சிங்பேடை பகுதியில் இருசக்கர வாகனத்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணை சமாதானம் பேச அழைத்து மீண்டும் வன்கொடுமை செய்த வழக்கறிஞர்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை வழக்கறிஞர் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஆக்ரா அரு... மேலும் பார்க்க

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமையாசிரியர் மீது போக்சோ வழக்கு பதிவு

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் ஆசிரியர் மீதும், அவர்மீது நடவடிக்கை எடுக்காத தலைமையாசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க

தூத்துக்குடி: ”லேசாகதான் வெட்டினேன்; ஆனால்” - கொலை வழக்கில் சரண்டரான ரவுடி இசக்கிமுத்து வாக்குமூலம்

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் – திருச்செந்தூர் சாலையோரம் கடந்த மாதம் 17-ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த அருண் செல்வம் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து சிவந்திபட்டி காவல் நிலைய... மேலும் பார்க்க

இளம்பெண்ணைக் கொன்று மூட்டைகட்டி வீசிய ஜோடி; சாலையோரம் தவித்த கைக்குழந்தை - பகீர் பின்னணி

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள கழிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவ விவசாயி சக்திவேல். இவரின் மனைவி அம்சா (வயது 28). இவர்களுக்கு 4 வயதில் நிவிஸ்தா என்ற மகளும், ஒன்றரை வயதில் நிவிலன் என்... மேலும் பார்க்க

கொல்கத்தா: 4 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை; ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அவலம்

கொல்கத்தாவில் நான்கே வயதாகும் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.நாடோடி சமூகத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி தனது பாட்டியுடன் கொல்கத்தா தாரகே... மேலும் பார்க்க