செய்திகள் :

`10 நிமிடம் தாமதம்' - ஆசிரியர் கொடுத்த `100 முறை சிட்-அப்' தண்டனையால் உயிரிழந்த மாணவி

post image

இப்போது பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் வேறு வழிகளில் தண்டனை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

மும்பை வசாயில் பகுதியில் அது போன்று தண்டனை பெற்ற ஒரு மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அங்குள்ள ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்தீர் பள்ளியில் 6-வது வகுப்பு படித்து வந்த காஜல் என்ற 12 வயது மாணவி பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்தார். உடனே அம்மாணவிக்கு அவரது வகுப்பு ஆசிரியை 100 முறை சிட் அப் செய்யும்படி தண்டனை கொடுத்துள்ளார். அதாவது நின்று உட்கார்ந்து எழ வேண்டும்.

மாணவியிடம் பேக்கை கூட கீழே வைக்க விடாமல் பேக்கோடு சிட் அப் செய்யும் படி செய்ய வைத்துள்ளார். மாணவி மாலையில் வீட்டிற்கு சென்றவுடன் தனது தாயாரிடம் தனது முதுகு பகுதியில் கடுமையாக வலிப்பதாக தெரிவித்துள்ளார்.

சித்தரிப்பு படம்
சிட்-அப் தண்டனை

அதோடு ஆசிரியை கொடுத்த தண்டனை குறித்தும் தெரிவித்துள்ளார். காஜலை அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவரை மும்பையில் உள்ள ஜெ.ஜெ.மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்குக் காரணமான பள்ளி மீதும்ம், ஆசிரியை மீதும் வழக்கு பதிவு செய்யாதவரைப் பள்ளியை திறக்க விடமாட்டோம் என்று மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா எச்சரித்துள்ளது.

இது குறித்து அக்கட்சி நிர்வாகி சச்சின் மோரே கூறுகையில், உயிரிழந்த மாணவி ஆஸ்துமா மற்றும் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டவர். அப்படிப்பட்டவருக்கு இது போன்ற தண்டனை கொடுத்திருக்கக்கூடாது'' என்று கூறினார். அதோடு அவரது கட்சியினர் பள்ளிக்குப் பூட்டு போட்டனர்.

உயிரிழந்த மாணவி

காஜலின் தாயார் இது பற்றி கூறுகையில்,எனது மகள் பள்ளிப்பையை முதுகில் சுமந்து சென்றபோது, சிட் அப் செய்யச் சொன்னதாக கூறினார். காஜல் வீட்டிற்கு வந்தவுடன் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினாள். தனக்கு கழுத்தில் இருந்து கீழ்நோக்கி, முதுகில் வலி இருப்பதாகவும், நடக்க முடியவில்லை என்றும் சொன்னார்'' என்றார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில், 'மாணவி மரணத்திற்கு ஆசிரியை கொடுத்த தண்டனைதான் காரணம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தால் தவறை ஏற்றுக்கொள்வதாகச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 22.06.2020-ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர... மேலும் பார்க்க

செல்போன் செயலி மூலம் பழக்கம்; வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டிய நபர் - கைதுசெய்த போலீஸ்!

சென்னையைச் சேர்ந்த 21 வயதாகும் இளம்பெண்ணுக்கு செல்போன் செயலி ஒன்று மூலம் லிபின்ராஜ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஒருகட்டத்தில் இளம்பெண்ணை லிபின்ராஜ் காதலிப்பதா... மேலும் பார்க்க

பரமக்குடி: காரில் வந்து ஆடு திருட்டு; ஓட்டம் பிடித்த தம்பதியை விரட்டி பிடித்த போலீஸார்!

பரமக்குடி எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் சரசு. இவர் நேற்று முன் தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிலருடன் அம்மன் கோயில் மற்றும் மாமாங்க தெப்பகுளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிர... மேலும் பார்க்க

நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?

கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை... மேலும் பார்க்க

`இன்ஷூரன்ஸ் இல்லாமல், எப்.சி. காலாவதியான போலீஸ் ஜீப் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு' - அதிர்ச்சி தகவல்

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் இன்சூரன்ஸ், எப்.சி காலாவதியான நிலையில் ஓட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை டு திருச்சி சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - என்ன காரணம்?

சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் புதுக்கோட்டை பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடி... மேலும் பார்க்க