செய்திகள் :

Saalumarada Thimmakka: `மரங்களின் தாய்' பத்மஶ்ரீ திம்மக்கா காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

post image

புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான சாலுமரதா திம்மக்கா (114), சில காலமாக உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார்.

யார் இந்த திம்மக்கா?

ஜூன் 30, 1911 அன்று கர்நாடகாவில் பிறந்த திம்மக்கா, முறையான கல்வி பெறாவிட்டாலும், அடிப்படை சுற்றுச்சூழல் செயல்பாட்டின் அடையாளமாக மாறினார். திருமணம் முடிந்தும் குழந்தை இல்லாத நிலையில், மரங்களைக் குழந்தைகளாக நேசிக்கத் தொடங்கினார்.

பத்மஶ்ரீ திம்மக்கா
பத்மஶ்ரீ திம்மக்கா

அதன் விளைவாக ராமநகர மாவட்டத்தில் ஹுலிகல் - கூடூர் இடையே 4.5 கி.மீ நீளமுள்ள பகுதியில், 385 ஆலமரங்களை நட்டு வளர்த்தார். அவரின் இந்தப் பணி உள்ளூர் முதல் சரவதேச அளவில் கவனம் பெற்றது.

அதன் பலனாக தேசிய குடிமகன் விருது (1995), இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா விருது (1997), ஹம்பி பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட நாடோஜா விருது (2010), பத்மஸ்ரீ விருது (2019) உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

கன்னடத்தில் "மரங்களின் வரிசை" என்று பொருள்படும் சாலுமரதா என்று அன்பாக அழைக்கப்படும் திம்மக்காவின் வாழ்க்கைப் பணி, பல தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தது. குறிப்பாக இந்தியாவின் சுற்றுச்சூழல் இயக்கத்திற்கு அவரின் பங்களிப்பது அளப்பரியது.

சாலுமரதா திம்மக்காவின் மரணத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா
சித்தராமையா

கர்நாடக முதல்வர் சித்தராமையா, ``விருக்ஷமதே' சாலுமரத திம்மக்காவின் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் வருத்தமடைந்தேன். ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அவற்றைத் தனது சொந்தக் குழந்தைகளைப் போல வளர்த்த திம்மக்கா, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக அர்ப்பணித்தார்.

அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்தாலும், இயற்கையின் மீதான அவரது அன்பு அவரை அழியாதவராக ஆக்கியுள்ளது. பிரிந்து சென்ற அந்த மாபெரும் ஆன்மாவுக்கு எனது அஞ்சலிகள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மகள் திருமணத்திற்கு முந்தைய நாள் தந்தை மரணம்; மறைத்து திருமணம் நடத்திய அண்ணன்; துரை வைகோ உருக்கம்

மறுநாள் சகோதரியின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் முதல்நாள் மாரடைப்பில் தந்தை மறைந்துவிட அந்தத் தகவலை மறைத்து சகோதரிக்கு இளைஞர் ஒருவர் திருமண விழாவை நடத்தியதாக, திருச்சி எம்.பி துரை வைகோ உருக்கமாகப் ... மேலும் பார்க்க

`பிள்ளைய கட்டுவிரியன் கடிச்சதே தெரியல; கடவுள் போல அரசு மருத்துவர்கள் மீட்டாங்க!' - நெகிழும் பெற்றோர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே உள்ள குளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவர், கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பாப்பாத்தி. இந்த தம்பதியினரின் ஆறு வயது மகள் மதுஸ்ரீ. கடந்த... மேலும் பார்க்க

``நம்ம வீடு இருட்டா இருந்தா, அப்படியே விடுவோமா?'' - சொந்த செலவில் ஊரை வெளிச்சமாக்கிய காவலர் தம்பதி

60 அடி உயர ஹைமாஸ் லைட்கடலூர் மாவட்டம், பண்ருட்டி கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த காவலர் அருண்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையில் பணியாற்றி வருகிறார். அருண்குமார் மனைவி, க... மேலும் பார்க்க

"10 கிலோ கருப்பட்டிக்கு 14 மணி நேரம் உழைப்பு தேவை" - கருப்பட்டி தொழிலாளியின் பகிர்வு

வெயிலின் சூட்டில் வியர்வை சொட்டியபடி, பதநீரின் சாற்றைக் காய்ச்சி, கருப்பட்டி உருவாகும் வரை அவர்களின் கைகள் ஓயாது வேலை செய்கின்றன. நாம் சுவைக்கும் அந்தக் கருப்பட்டியின் இனிப்புக்கு பின்னால் பலரின், போர... மேலும் பார்க்க

``நிறைய நல்லவங்களும் இருக்காங்க, அவங்களைத்தான் நான் மனசுல வச்சுப்பேன்'' - ஆட்டோ ஓட்டும் திருநங்கை

நள்ளிரவில் அடைமழையில் சிக்கிக்கொண்டேன். ஒதுங்க இடம் தேடி, பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்தேன்.என் சூழலைக் கண்டும் காணாதது போல தீவிரமடைந்தது மழை. ஆட்டோ புக் செய்வதுதான்ஒரே வழி என்பதை உணர்ந்து புக்... மேலும் பார்க்க