செய்திகள் :

``நம்ம வீடு இருட்டா இருந்தா, அப்படியே விடுவோமா?'' - சொந்த செலவில் ஊரை வெளிச்சமாக்கிய காவலர் தம்பதி

post image

60 அடி உயர ஹைமாஸ் லைட்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த காவலர் அருண்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையில் பணியாற்றி வருகிறார்.

அருண்குமார் மனைவி, காவலர் காயத்ரி, கடலூர் ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து, தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு
அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு

தங்கள் ஊர் பேருந்து நிலைய நிறுத்தம் இருட்டில் இருந்ததால், அங்கு தெருவிளக்கு அமைக்க நினைத்தார்கள் அருணும் காயத்ரியும்.

அதன்படி, தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து, 6 லைட்களுடன் 60 அடி உயரத்தில் `ஹைமாஸ் லைட்’ அமைத்து நெகிழ வைத்திருக்கிறார்கள்.

அதுகுறித்துக் கேள்விப்பட்ட கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

`ஊருக்கு எதையாவது செய்யணும்’

காவலர் அருணிடம் இதுகுறித்துப் பேசியபோது, “புதுச்சேரியில் +2-வையும், பண்ருட்டியில் 2016-ல் EEE படிப்பையும் முடித்தேன். 2017-ல் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தேன்.

அதேபோல், பி.எஸ்.சி., பி.எட். படித்திருந்த காயத்ரியும் அதே ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார்.

எங்களோட ஊர் சின்ன கிராமம். எங்களை வளர்த்து வேலைக்கு அனுப்பிய கிராமத்துக்கும், அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று நானும் என் மனைவியும் அடிக்கடி பேசிக் கொள்வோம்.”

ஹைமாஸ் விளக்கு
ஹைமாஸ் விளக்கு

அதன் ஒருபடியாக இரண்டு டைப்ரைட்டிங் மெஷின்களை வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால் அதை சொல்லிக் கொடுக்க ஆசிரியர் இல்லாததால், அவற்றை அப்படியே வைத்திருக்கிறோம்.

இந்த நிலையில்தான் எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம் நீண்ட நாளாக இருட்டில் இருப்பது எங்கள் நினைவுக்கு வந்தது.

`இருட்டில் 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும்’

கடலூர்–பண்ருட்டி சாலையில் இருக்கும் மேல்பட்டாம்பாக்கத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி உள்புறமாக இருக்கிறது எங்கள் கொங்கராயனூர் கிராமம்.

விழுப்புரத்தில் இருந்து மாளிகைமேடு வழியாக வந்து செல்லும் சில பேருந்துகள்தான் எங்களுக்கான பேருந்துகள். இரவு நேரங்களில் அவற்றை தவறவிட்டால், பட்டாம்பாக்கம் வரை இரண்டு கிலோமீட்டர்கள் இருட்டில் நடந்து வந்துதான் பேருந்தைப் பிடிக்க வேண்டும்.

அருண் - காயத்ரி
அருண் - காயத்ரி

எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம் இரவு நேரங்களில் 100% இருட்டாக இருக்கும். அதனால் அடிக்கடி சிறிய விபத்துகள் ஏற்படுவதுடன், பாம்புகளாலும் தேள்களாலும் எங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அதனால் அங்கு ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என்று காயத்ரியும் நானும் முடிவு செய்தோம். அதுகுறித்து விசாரித்தபோது ரூ.60,000 செலவாகும் என்றார்கள். எங்களுக்கு சஜின், சாத்விக் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

`யாரிடமும் கடனோ, அன்பளிப்போ வாங்கவில்லை...’

அதனால், நினைத்த உடனே பணத்தை எடுத்து செலவு செய்வது எங்களுக்கு முடியாத காரியம். அதனால், ஒவ்வொரு மாதமும் ஹைமாஸ் விளக்குக்காக ஒரு தொகையை தனியே எடுத்து வைத்தோம்.

அந்தப் பணத்தில் ஹைமாஸ் லைட் அமைப்பதற்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் வாங்கி வைத்தோம். அதற்கான முழு பணமும் இப்போதுதான் சேர்ந்தது.

அதற்காக நாங்கள் யாரிடமும் ஒரு ரூபாய்கூட கடனாகவோ, அன்பளிப்பாகவோ வாங்கவில்லை.

வாழ்த்து தெரிவிக்கும்ம் எஸ்.பி ஜெயக்குமார்
வாழ்த்து தெரிவிக்கும்ம் எஸ்.பி ஜெயக்குமார்

இந்த லைட் அமைத்ததால், எங்கள் ஊர் பெண்கள் இரவில் பயமின்றி பேருந்துக்காக நிற்கிறார்கள், நடந்து செல்கிறார்கள். எங்கள் ஊர் இளைஞர்கள்தான் இதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டார்கள்.

எஸ்.பி. ஜெயக்குமார் சார் எங்களை நேரில் அழைத்துப் பாராட்டியபோது ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. “நம்ம வீடு இருட்டா இருந்தா நாம விடுவோமா? அப்படித்தான் நம்மை வாழ வைக்கும் ஊரும்,” என்றார் நெகிழ்ச்சியுடன்.

"10 கிலோ கருப்பட்டிக்கு 14 மணி நேரம் உழைப்பு தேவை" - கருப்பட்டி தொழிலாளியின் பகிர்வு

வெயிலின் சூட்டில் வியர்வை சொட்டியபடி, பதநீரின் சாற்றைக் காய்ச்சி, கருப்பட்டி உருவாகும் வரை அவர்களின் கைகள் ஓயாது வேலை செய்கின்றன. நாம் சுவைக்கும் அந்தக் கருப்பட்டியின் இனிப்புக்கு பின்னால் பலரின், போர... மேலும் பார்க்க

``நிறைய நல்லவங்களும் இருக்காங்க, அவங்களைத்தான் நான் மனசுல வச்சுப்பேன்'' - ஆட்டோ ஓட்டும் திருநங்கை

நள்ளிரவில் அடைமழையில் சிக்கிக்கொண்டேன். ஒதுங்க இடம் தேடி, பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்தேன்.என் சூழலைக் கண்டும் காணாதது போல தீவிரமடைந்தது மழை. ஆட்டோ புக் செய்வதுதான்ஒரே வழி என்பதை உணர்ந்து புக்... மேலும் பார்க்க

`வாய் நிறைய கோதுமை அல்வா,மணக்கும் மட்டன் குழம்பு' - வழக்கறிஞர் சாந்தகுமாரி வீட்டு தீபாவளி

சமூக வலைதளங்களைப் பயனுள்ளதாக பயன்படுத்துபவர்களின் கண்களுக்கு கட்டாயம் தென்பட்டிருப்பார் வழக்கறிஞர் சாந்தகுமாரி. பெண்களுக்காகவும் போராடுவார். ஆண்களின் நியாயத்துக்காகவும் பேசுவார். வீடு, பணியிடம் என இரண... மேலும் பார்க்க

`ஊக்கத்தொகை நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதிகாரியானால்' - தன் புத்தகம் குறித்து ராம் பிரசாத் மனோகர் IAS

ஐ.ஏ.எஸ் ராம் பிரசாத் மனோகர் தன் வாழ்க்கையையும், அவர் கடந்துவந்த பாதையையும் மாணவர்களுக்கு உத்வேகமூட்டும் வகையில் 'கருவிலிருந்து கலெக்டர் வரை' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்த... மேலும் பார்க்க

`பாதுகாப்பு மட்டுமல்ல, பாசமும் தான்' – திருமணத்தில் அண்ணனாக மாறிய வீரர்கள்; நெகிழ்ந்த குடும்பம்

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம், பார்லி கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ராணுவ வீரர்கள் குழு ஒன்று, வீரமரணம் அடைந்த தங்கள் சக ஊழியரின் சகோதரிக்குச் சகோதரர் பொறுப்பை ஏற்று செய்த செயல், அ... மேலும் பார்க்க

`சென்று வாருங்கள் Jane Goodall ' - மறைந்தார் சிம்பன்சிகளின் தோழி!

உலகம் முழுவதும் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காப்பின் சின்னமாக திகழ்ந்த ஜேன் கூடால், 2025 அக்டோபர் 1ஆம் தேதி 91 வயதில் மரணமடைந்தார். “வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குச் சமமான உணர்வுகள் ... மேலும் பார்க்க