செய்திகள் :

சாத்தான்குளம் கொலை வழக்கு: `போலீஸாரின் கூட்டுச்சதி பிரிவையும் சேர்க்க வேண்டும்’ - சிபிஐ தரப்பு பதில்

post image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 22.06.2020-ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸாரால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இதில், அடுத்தடுத்த நாட்களில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கினை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பால கிருஷ்ணன் உட்பட 10 போலீஸார் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்

பின்னர், இவ்வழக்கு சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக்கோரி ஜெயராஜின் மனைவி ஜெயராணி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு பலமுறை விசாரணைக்கு வந்தபோது அவ்வப்போது அவகாசம் வழங்கப்பட்டது.

அத்துடன் ஏற்கெனவே இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது இவ்வழக்கினை 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது விசாரணையை முடிக்க மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டுமென சி.பி.ஐ தரப்பில் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஏன் மேலும் 6 மாதம் அவகாசம் வேண்டும் என சி.பி.ஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனு நீதிபதி முரளி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சாத்தான்குளம்

“இந்த வழக்கில் போலீஸாரின் கூட்டுச்சதி இருக்கலாம் என்பதால் அதற்கான பிரிவையும் சேர்க்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, அது குறித்து கீழமை நீதிமன்றமே முடிவு செய்து கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை அந்த பிரிவு சேர்க்கப்படவில்லை.” என தெரிவிக்கப்பட்டது. அந்த பிரிவுகளையும் சேர்த்து சாட்சிகளை மீண்டும் விசாரித்தால் ஏற்படும் பின் விளைவுகளை அறிவீர்களா? என கேள்வி எழுப்பி, இதற்கும் சி.பி.ஐ தரப்பில் விளக்கம் கேட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

செல்போன் செயலி மூலம் பழக்கம்; வீடியோவை வைத்து இளம்பெண்ணை மிரட்டிய நபர் - கைதுசெய்த போலீஸ்!

சென்னையைச் சேர்ந்த 21 வயதாகும் இளம்பெண்ணுக்கு செல்போன் செயலி ஒன்று மூலம் லிபின்ராஜ் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார். பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஒருகட்டத்தில் இளம்பெண்ணை லிபின்ராஜ் காதலிப்பதா... மேலும் பார்க்க

பரமக்குடி: காரில் வந்து ஆடு திருட்டு; ஓட்டம் பிடித்த தம்பதியை விரட்டி பிடித்த போலீஸார்!

பரமக்குடி எமனேஸ்வரம் ஈஸ்வரன் கோயில் மேலத்தெருவை சேர்ந்தவர் சரசு. இவர் நேற்று முன் தினம் காலை அப்பகுதியை சேர்ந்த சிலருடன் அம்மன் கோயில் மற்றும் மாமாங்க தெப்பகுளம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிர... மேலும் பார்க்க

நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?

கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை... மேலும் பார்க்க

`இன்ஷூரன்ஸ் இல்லாமல், எப்.சி. காலாவதியான போலீஸ் ஜீப் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு' - அதிர்ச்சி தகவல்

போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் வாகனம் இன்சூரன்ஸ், எப்.சி காலாவதியான நிலையில் ஓட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை டு திருச்சி சாலையில் தரையிறக்கப்பட்ட விமானம்; அதிர்ச்சியடைந்த மக்கள்! - என்ன காரணம்?

சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று சேலத்தில் இருந்து புறப்பட்டு இன்று மதியம் சுமார் 12.40 மணியளவில் புதுக்கோட்டை பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த போது, அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடி... மேலும் பார்க்க

``நீதிபதிக்கு 15 லட்சம், எனக்கு 10 லட்சம்'' - லஞ்சம் வாங்கிய கிளார்க் கைது; நீதிபதி மீது வழக்கு

மும்பை பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் இருக்கிறது. அந்த நிலத்திற்கு வேறு ஒருவரும் உரிமை கொண்டாடி வருகிறார். இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு... மேலும் பார்க்க