செய்திகள் :

தென்காசி: `அதிகரிக்கும் யானை-மனித எதிர்கொள்ளல்' - கட்டுப்படுத்த யானை தோழர்கள் குழு

post image

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் வன விலங்குகள்-மனித எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் விவசாய பயிர்களையும் சேதப்படுத்தும் சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், அதனை கட்டுப்படுத்த தென்காசி மாவட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், முதல் முயற்சியாக யானை வாழ்விட மாற்றங்களை கண்டறிந்து மீண்டும் அதனை உருவாக்க தேவையான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை கட்டுப்படுத்தும் விதமாக யானை தோழர்கள் என்ற குழு தென்காசி மாவட்ட வனத்துறையினர் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

யானை தோழர்கள்
யானை தோழர்கள்

குறிப்பாக, இந்த குழுவினர் விவசாயிகளாகவோ, பொதுமக்களாகவோ யாராகவோ இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடும் போது அவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முதற்கட்டமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, கடையநல்லூர், குற்றாலம் உள்ளிட்ட வனசரக எல்லைப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் இந்த யானை தோழர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவின் மூலம் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளியேறாமல் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தென்காசி மாவட்ட வன அலுவலர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: ``இந்த திட்டம் வெற்றி பெற்றால் வனங்கள் அனைத்தும் வளமாகும்'' - வனத்துறை

200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் தேயிலை, காஃபி, மலை காய்கறிகளை இங்கு அறிமுகம் செய்ததுடன், அழகுத் தாவரம் என்கிற பெயரில் மேலை நாடுகளில் இருந்து பல்வேறு வகையான தாவரங்களையும் அற... மேலும் பார்க்க

Spiders: தங்களுடைய வலைகளையே சாப்பிடும் சிலந்திகள்; அறிவியல் சொல்லும் காரணம் தெரியுமா?

சிலந்திகள் சிக்கலான வலைகளைப் பின்னி அதைத் தங்கள் இருப்பிடமாகவும், இரையைப் பிடிக்கும் பொறியாகவும் பயன்படுத்துகின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால், பழைய அல்லது சேதமடைந்த வலைகளை அவை உண்பது குறித்து ... மேலும் பார்க்க

நீலகிரி: கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய பெண் சிறுத்தை - போராடி மீட்ட வனத்துறை

நீலகிரியில் அதிகரித்து வரும் காடழிப்பு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் தேயிலை தோட்டங்களில் தஞ்சமடைந்து வருகின்றன. தடுப்பு வேலிகள், சுருக்கு கம்பிகள், மின் வேலிகள் போன்றவற்றில் சிக்கி வனவ... மேலும் பார்க்க

ஊட்டி: டாஸ்மாக் பாராக மாறிய நீர்நிலை - வனவிலங்குகள் பாதிப்பு; வனத்துறை, வருவாய்த்துறை அலட்சியம்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி அணை. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அணையிலிருந்து அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு ... மேலும் பார்க்க

1 லட்சம் சிலந்திகளுடன் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலை கண்டுபிடிப்பு - எங்கே தெரியுமா?

ருமேனிய விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய சிலந்தி வலையைக் கண்டுபிடித்துள்ளனர். கிரீஸ்-அல்பேனியா எல்லையில் அமைந்துள்ள ஒரு பிரம்மாண்ட குகைக்குள், சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் சிலந்திகள் ஒன்றாக வசிக்கும் இந்த... மேலும் பார்க்க

நுரையீரல் இல்லாமலும் சுவாசிக்கும் தவளைகள் - சுவாரஸ்யத் தகவல்கள்

தவளைகள், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினம் என்று பலருக்கும் தெரியும். அவை நுரையீரல்கள் இல்லாமலேயே தங்கள் தோல் மூலம் சுவாசிக்கும் திறன் கொண்டது என்பது பலருக்கும் தெரியாது. இதுகுறித்து விரிவாக தெ... மேலும் பார்க்க