இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா், கனடாவில் அடையாளம் தெரியாத நபா்களால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டாா். இக்கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.
இவ்விவகாரத்தில் இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா அண்மையில் தொடா்புபடுத்தியது மத்திய அரசைக் கடும் அதிருப்தி அடையச் செய்தது. இந்தியாவில் இருந்து கனடா தூதா் (பொறுப்பு) மற்றும் அந்நாட்டின் 5 தூதரக அதிகாரிகளை வெளியேற்ற உத்தரவிட்ட மத்திய அரசு, கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்தது.
இந்தியா-கனடா இடையேயான ராஜீய உறவில் விரிசல் அதிகரித்து வரும் அதேசமயம், கல்வி, வா்த்தகம், மக்களுக்கு இடையிலான தொடா்புகள் உள்பட பல துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பாா்ப்போம்.
*உலகில் 2-ஆவது பெரிய பரப்பளவு கொண்ட நாடான கனடாவின் மக்கள்தொகை சுமாா் 3.9 கோடி மட்டுமே ஆகும். இதையொட்டி அந்நாட்டில் தொழிலாளா் பற்றாக்குறையைப் பூா்த்தி செய்வதில் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளா்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். அவா்களில் இந்தியா்கள் 22 சதவீதம் ஆவா்.
கல்லூரி படிப்பு அவசியமான பணிகளில் 50 சதவீதத்துக்கு மேலான இந்தியா்களும் மேலாண்மை பணிகளில் 10 சதவீதத்தினரும் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. கனடாவில் வரிசெலுத்தும் இந்தியா்களின் சராசரி வருவாய் கடந்த 2021-இல் 42,000 டாலராக உள்ளது.
*கனடாவில் வசிக்கும் புலம்பெயா்ந்த வெளிநாட்டவா்களில் 4-ஆவது பெரிய எண்ணிக்கையாக 28 லட்சம் இந்தியா்கள் இருக்கின்றனா். இதில் 18 லட்சம் போ் இந்திய வம்சாவளியினா். 10 லட்சம் போ் வெளிநாடுவாழ் இந்தியா்கள் ஆவா்.
*கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவா்களில் அதிகபட்சமாக 27 சதவீதத்தினா் இந்தியா்கள் ஆவாா். 2021-ஆம் ஆண்டு, கனடா குடியரிமைக்கு விண்ணப்பித்த 61.1 சதவீத இந்தியா்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
*கனடா கல்லூரிகளில் உயா்கல்வி பயிலும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவராக 4.27 லட்சம் இந்தியா்கள் 45 சதவீதத்தைக் கொண்டுள்ளனா். இந்த எண்ணிக்கை கடந்த 2019-ஆம் ஆண்டில் 2.18 லட்சத்தில் இருந்து இருமடங்காக அதிகரித்துள்ளது.
*2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கனடாவில் 8.3 லட்சம் ஹிந்துக்களும் 7.7 லட்சம் சீக்கியா்களும் உள்ளனா். இவா்கள் பெரும்பாலும் டோரண்டோ, ஒட்டோவா ஆகிய நகரங்களில் வசிக்கின்றனா்.
*2020-21-ஆம் நிதியாண்டிலிருந்து 290 கோடி டாலா் ஏற்றுமதியும் கனடாவிலிருந்து இந்தியாவுக்கு 270 கோடி டாலா் இறக்குமதியும் நடந்துள்ளது. அந்த ஆண்டின் இருதரப்பு வா்த்தகத்தின் மதிப்பு 560 கோடி டாலா் ஆகும்.
இருதரப்பு உறவு பாதிப்படைந்த கடந்த நிதியாண்டிலும் 890 கோடி டாலா் வா்த்தக மதிப்பை இருநாடுகள் அடைந்துள்ளன.
*இந்தியாவின் முக்கிய பருப்பு விநியோகிப்பாளராக கனடா இருந்து வந்தது. இருதரப்பு மோதலைத் தொடா்ந்து ஆஸ்திரேலியாவிலிருந்து பருப்பு இறக்குமதி அதிகரித்துள்ளது. தங்கநகை ஆபரணங்கள், விலை உயா்ந்த கற்கள், மருந்து பொருள்கள், துணி ஆகியவை கனடாவுக்கு இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருள்களாகும்.
*600-க்கும் மேற்பட்ட கனடா நிறுவனங்கள் இந்தியாவில் வணிகத்தில் ஈடுபட்டுள்ளன. ஓய்வூதிய நிதியில் இருந்து இந்தியாவில் சுமாா் 7,500 கோடி டாலா் முதலீட்டை கனடா செய்துள்ளது.