செய்திகள் :

ரூ.58,000-ஐ கடந்த தங்கம் விலை: அதிர்ச்சியில் மக்கள்!

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.58,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து நான்காவது நாளாக மீண்டும் பவுனுக்கு ரூ.320 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் அக்.16-இல் பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.57,120-க்கும், அக்.17-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.57,280-க்கும், அக்.18-இல் பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.57,920-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை(அக்.19) தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280-க்கும், பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,240-க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,480 உயா்ந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலை தொடா்ந்து 5-ஆவது நாளாக மாற்றமின்றி விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.2 உயா்ந்து ரூ.105-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2,000 உயா்ந்து ரூ.1,05,000-க்கும் விற்பனையான நிலையில், சனிக்கிழமை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.105.10-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 உயர்ந்து ரூ.1,05,100-க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிக்க |கொள்ளை போன ரூ.1 கோடி: மீட்க உதவிய மோப்ப நாய்

ரூ.60,000-ஐ தொடும்

அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்துள்ள நிலையில், அது வரும் நவம்பா் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. அதேபோல், ஐரோப்பிய மத்திய வங்கியும் அதன் வட்டியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் தங்கம் விலை பவுன் ரூ.60,000-ஐ தொடக்கூடும் என்று கூறுகின்றனர்.

கடந்த 4 நாள்களில் தங்கம் விலை நிலவரம்

கிராம் பவுன்

அக். 16: ரூ.7,140 (+45) ரூ.57,120 (+360)

அக். 17: ரூ.7,160 (+20) ரூ.57,280 (+160)

அக். 18: ரூ.7,240 (+80) ரூ.57,920 (+640)

அக். 19: ரூ.7,280 (+40) ரூ.58,240 (+320)

மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?: ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி

2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது ... மேலும் பார்க்க

குப்பையில் கிடைத்த தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களுக்கு குவியும் பாராட்டு!

திருப்பரங்குன்றம்: திருமங்கலத்தில் குப்பைகளை தரம் பிரிக்கும் போது கிடைத்த தங்க மோதிரத்தை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை பாராட்டியது.திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் ச... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,384 கன அடியாக சரிந்துள்ளது.காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை சற்று தனிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 19,090 கன அடியிலிருந்... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது: பியூஷ் கோயல்

புதுதில்லி : நாட்டின் அடிப்படை வலுவாக உள்ளதால், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், பியூஷ் கோயல் தெரிவித்தார்.இது குறித்து ப... மேலும் பார்க்க

ஆளுநர் பங்கேற்ற ஹிந்தி விழாவில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சை!

சென்னையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி பாடப்படவில்லை என சர்ச்சை கிளம்பியுள்ளது. சென்னையில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்... மேலும் பார்க்க

உதயநிதி ஸ்டாலினை சட்டை அணியச் சொல்லுங்கள்! சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது முறைப்படியான ஆடைக் கட்டுபாட்டைக் கடைபிடிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பா... மேலும் பார்க்க