செய்திகள் :

லியோ ஓராண்டு நிறைவு..! லோகேஷ் கனகராஜ் கூறியதென்ன?

post image

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் லியோ.

 விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இருந்தது. அதேமாதிரி முதல்நாள் வசூலிலும் படம் சாதனை படைத்தது.

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடித்திருந்தனர்.

கோட் படம் லியோ அளவுக்கு வசூலில் வெற்றிபெறவில்லை. தற்போது விஜய் 69 படத்தினை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து கூலி படத்தினை இயக்கி வருகிறார்.

இதையும் படிக்க:சூர்யா 44 கேங்ஸ்டர் படமில்லை..! ரிலீஸ் குறித்து பேசிய கார்த்திக் சுப்புராஜ்!

இந்நிலையில், லியோ திரைப்படம் வெளியாகி ஒருவருடம் ஆனதைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

பல் நினைவுகள், பல கற்பிதங்கள், பலவிதமான ஆச்சரியமான தருணங்கள். லியோ எப்போதும் எனது மனதுக்கு நெருக்கமான ஒரு படமாகும். இதை நிகழ்த்தியதுக்கு மிக்க நன்றி விஜய்ணா.

தங்களது வியர்வையும் ரத்தத்தையும் கொடுத்து இந்தப் படத்துக்காக உழைத்தவர்களுக்கும் ரசிகர்களுக்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டவனாக இருப்பேன் என்றார்.

அண்ணா என்றழைத்த சாய் பல்லவி..! கடுப்பான சிவகார்த்திகேயன்!

தென்னிந்தியாவின்பிரபலமான நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருக்கென தனி ரசிகர் பட்டாளங்களே இருக்கின்றன.குறிப்பாக, மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் திரைப்படத்திற்கு தென்னிந்தியா... மேலும் பார்க்க

ஆர்ஜே பாலாஜியின் சொர்கவாசல்..! முதல் பார்வை போஸ்டர்!

ஆர்ஜேவாக இருந்து நடிகராக மாறியவர் ஆர்ஜே பாலாஜி. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் இருக்கிறார். நயன்தாராவை வைத்து இயக்கிய மூக்குத்தி அம்மன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது நடிகர் சூர்யாவின் 45ஆவ... மேலும் பார்க்க

தினப்பலன்கள்: 12 ராசிக்கும்!

12 ராசிகளுக்கான தினப்பலன்களை பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்தது..19.10.2024மேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள... மேலும் பார்க்க

நுரை பொங்கி பாயும் யமுனை ஆறு - புகைப்படங்கள்

மலைபோல் நுரை பொங்கி உள்ள யமுனை ஆறு.யமுனை ஆற்றில் நிரம்பி காணப்படும் நச்சுநீர்.யமுனையில் வெண்மேகம் போல் குவிந்த நச்சுநீர்.நச்சுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வர... மேலும் பார்க்க