செய்திகள் :

`இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடாதீர்கள்' - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

post image

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன், ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும் இன்று மாலை நடைபெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இத்தகைய அறிவிப்பால், தமிழ்நாட்டு அரசியல் காட்சிகள் பலவும் மீண்டும் மீண்டும் இந்தியைத் திணிப்பதா என மத்திய அரசைச் சாடின.

இந்தி சர்ச்சை

இந்த நிலையில், இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்துவது மூலம் அம்மாநில மொழிகளை சிறுமைபடுத்தும் செயல் என்றும், அதனைத் தவிர்க்குமாறும் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ``இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை. சட்டமியற்றுதல், நீதித்துறை மற்றும் தகவல் தொடர்பு போன்ற அலுவல் நோக்கங்களுக்காக மட்டுமே இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் பேசும் நாட்டில், இந்திக்கு தனி இடம் அளிப்பதும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதும் பிற மொழிகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. எனவே, இந்தி பேசாத மாநிலங்களில் இதுபோன்ற இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதைத் தவிர்க்கலாம் அல்லது ஒன்றிய அரசு இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த விரும்பினால், அந்தந்த மாநிலங்களின் உள்ளூர் மொழிக்கான மாதக் கொண்டாட்டங்களையும் அதேபோல் கொண்டாடவேண்டும். மேலும், இந்திய அரசு செம்மொழியாக அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளின் சிறப்பையும் செழுமையையும் கொண்டாட இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தலாம். இது அனைவரிடையேயும் ஒரு சுமுகமான உறவை மேம்படுத்தும்" என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

ஸ்டாலின் - மோடி

இது தவிர எக்ஸ் தளத்தில் ஸ்டாலின், ``சென்னை தொலைக்காட்சியின் பொன்விழா நிகழ்ச்சிகளுடன் இந்தி மாத நிறைவு விழா கொண்டாடப்படுவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, செம்மொழித் தகுதி பெற்ற அத்தனை மொழிகளையும் கொண்டாட வேண்டும். நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்ற வேண்டும்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `பக்திச் சிரத்தையோடும், துல்லியமாகவும் பாடுவேன்' - ஆளுநரின் பதில்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தின... மேலும் பார்க்க

`எங்கள் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்; திமுக-வில் யார் ஸ்டாலினா... உதயநிதியா?' - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

"மீண்டும் அதிமுக ஆட்சி மலர தடையாய் இருந்தவர்கள் இன்றைக்கு கட்சி வேட்டி கட்டமுடியாமல் தெருவில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்..." என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: `நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்!' - டிடி தமிழ்

தூர்தர்ஷன் தமிழ் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு ... மேலும் பார்க்க

`திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி!' - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடே, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விர... மேலும் பார்க்க