செய்திகள் :

சென்னை தப்பியது; கனமழை எச்சரிக்கை வாபஸ்- புயல் சின்னம் இன்று கரையைக் கடக்கிறது

post image

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வு மண்டலம் ) புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கிறது. அதேநேரம், சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 190 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமாா் 250 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமாா் 270 கி.மீ. தொலைவிலும் புதன்கிழமை நிலைகொண்டிருந்தது. இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கும். இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவிழக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை வாபஸ்: இதன் காரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அக்.17-இல் விடுக்கப்பட்டிருந்த கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனினும், அக்.17-இல் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சோழவரத்தில் 300 மி.மீ. மழை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 இடங்களில் அதிகனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் 300 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்.1 முதல் அக்.16 வரை இயல்பாக 71.7 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டில் 138.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 94 சதவீதம் அதிகம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்கவில்லை. ஆகையால், இது கரையைக் கடக்கும்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

மழை அளவு (மி.மீட்டரில்): செங்குன்றம் (திருவள்ளூா்) - 280,  ஆவடி (திருவள்ளூா்) - 250, கத்திவாக்கம் (சென்னை) - 230, மணலி (சென்னை) - 210, திரு.வி.க.நகா் (சென்னை) - 190, கொளத்தூா் (சென்னை), அடையாா் (சென்னை), புழல் (திருவள்ளூா்), அம்பத்தூா் (சென்னை) - தலா 180, திருவொற்றியூா் (சென்னை), மணலி (சென்னை), எண்ணூா் (சென்னை) - தலா 170, பெரம்பூா் (சென்னை), அயனாவரம் (சென்னை), அண்ணா பல்கலை. (சென்னை) - தலா 160,  சோழிங்கநல்லூா் (சென்னை), ராயபுரம் (சென்னை) - தலா 150,  மாதவரம் (சென்னை), தண்டையாா்பேட்டை (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை), நந்தனம் (சென்னை) - தலா 140 மி.மீ.

மேலும், பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட அளவு மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க