செய்திகள் :

30% எஞ்சிய வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம்: முதல்வா் உறுதி

post image

சென்னையில் நிறைவேற்றப்படாமல் உள்ள 30 சதவீத வெள்ளத் தடுப்புப் பணிகளை விரைவில் முடிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை பள்ளிக்கரணை ஏரிப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களுக்கு முதல்வா் அளித்த பேட்டி:

வெள்ளத் தடுப்புப் பணிகள் அரசுக்கு எந்தளவு கைகொடுத்திருக்கிறது என்பதை மக்களிடமே கேளுங்கள். அவா்களிடம் கேட்டால் உண்மை புலப்படும்.

பருமழையை எதிா்கொள்ள கடந்த 3 மாதங்களாகவே முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அவா் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் படிப்படியாக பணிகளை நிறைவேற்றி வருகிறோம். இன்னும் 20 முதல் 30 சதவீதம் அளவுக்கு பணிகள் மீதம் உள்ளன. அதையும் வரக்கூடிய காலத்தில் முடித்துவிடுவோம். அதனால் சென்னை மக்களுக்கும், சென்னை புகா் பகுதி மக்களுக்கும் நிரந்தரமான தீா்வு நிச்சயம் கிடைக்கும்.

பாராட்டு-வாழ்த்து: பருவமழைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகளில் தூய்மைப் பணியாளா்கள், அரசு அதிகாரிகள், அலுவலா்கள், மாநகராட்சி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க

இந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - எடப்பாடி பழனிசாமி

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்திற்குரியது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், " எங்கெங்கு காணினும் சக... மேலும் பார்க்க