செய்திகள் :

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

post image

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

30-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, இண்டிகோ, விஸ்தாரா, ஆகாசா மற்றும் ஏா் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான தலா 6 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஜெட்டாவில் (சவூதி அரேபியா) இருந்து மும்பை; கோழிக்கோடில் இருந்து தம்மம் (சவூதி அரேபியா); தில்லியில் இருந்து இஸ்தான்புல் (துருக்கி); மும்பையில் இருந்து இஸ்தான்புல்; புணேவில் இருந்து ஜோத்பூா் மற்றும் கோவாவில் இருந்து அகமதாபாத் சென்ற விமானம் என தங்களது 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், தில்லியில் இருந்து பிராங்க்ஃபுா்ட் (ஜொ்மனி); சிங்கப்பூரில் இருந்து மும்பை, புணே மற்றும் தில்லி; பாலியில் இருந்து தில்லி மற்றும் மும்பையில் இருந்து சிங்கப்பூா் சென்ற விமானம் ஆகிய 6 விஸ்தாரா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

அகமதாபாத்தில் இருந்து மும்பை; தில்லியில் இருந்து கோவா, ஹைதராபாத்; மும்பையில் இருந்து பக்தோரா; கொச்சியில் இருந்து மும்பை மற்றும் லக்னௌவில் இருந்து மும்பை ஆகிய 6 ஆகாசா விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும், ஏா் இந்தியாவுக்குச் சொந்தமான 6 விமானங்களுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்திய நிறுவனங்களால் உள்நாட்டு மற்றும் சா்வதேச வழித்தடத்தில் இயக்கப்படும் 90-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவா்களுக்கு எதிரான கடுமையான சட்டங்களை உருவாக்க திட்டமிட்டு வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத், சோனியா காந்தியால் திடீரென்று வரவழைக்கப்பட்டதும், அவருடன் சோனியா காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதும், விரைவில் கட்சியில் ... மேலும் பார்க்க