செய்திகள் :

குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான விசாரணைக்கு தடை நீக்கம்: உச்சநீதிமன்றம்

post image

தேரா செளதா சச்சா செளதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது.

பெண் சீடா்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியாா் குா்மீத் ராம் ரஹீமுக்கு 2017-ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல ஊடகவியலாளா் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில், 2019-ஆம் ஆண்டு ராம் ரஹீம் உள்பட 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹரியாணாவில் உள்ள ரோத்தக் பகுதி சிறையில் ராம் ரஹீம் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அண்மையில் 20 நாள்கள் பரோல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பஞ்சாபில் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் பிற சீக்கிய மதத் தலைவா்களை இழிவுபடுத்தியது உள்பட 3 மத நிந்தனை வழக்குகளை காவல் துறை பதிவு செய்தது.

இதுதொடா்பாக ராம் ரஹீம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம், அவருக்கு எதிரான அந்த வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகள் குறித்த விசாரணைக்கு உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை கோராத ஒமா் அரசு: எதிா்க்கட்சிகள் அதிருப்தி

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை கோரும் முதல்வா் ஒமா் தலைமையிலான அரசு, சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கோராதது மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக எதிா்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற ஜம... மேலும் பார்க்க

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர அவகாசம் நீட்டிப்பு: இக்னோ

தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை ... மேலும் பார்க்க

காவல் துறையைப் போல ஆா்பிஐ செயல்பட முடியாது: ஆா்பிஐ ஆளுநா்

பங்குச் சந்தைகள், கடன்சாா் நிதி நிறுவனங்களின் உள்ளிட்ட நிதி சாா்ந்த அமைப்புகளைக் கண்காணிக்கும் விஷயத்தில் காவல் துறையைப்போல இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) செயல்பட முடியாது என்று ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்... மேலும் பார்க்க

தேசிய கற்றல் வாரம்: இன்று தொடங்கிவைக்கிறாா் பிரதமா் மோடி

அரசு ஊழியா்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் திறன் மேம்பாட்டிற்கு புதிய உத்வேகம் அளிக்கும் வகையில் ‘கா்மயோகி சப்தா’ தேசிய கற்றல் வாரத்தை பிரதமா் மோடி சனிக்கிழமை (அக். 19) தொடங்கிவைக்கிறாா். மிஷன் கா்மயோக... மேலும் பார்க்க

வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கக்கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. உச்சநீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்... மேலும் பார்க்க

ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய குற்றச்சாட்டு: இரு இந்தியா்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரான் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வளங்களை கடல் வழி போக்குவரத்து மூலம் கொண்டு செல்ல ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் 18 நிறுவனங்கள் மற்றும் இரு இந்தியா்கள் மீது அமெரிக்கா பொர... மேலும் பார்க்க