தேரா செளதா சச்சா செளதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குா்மீத் ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகளின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நீக்கியது.
பெண் சீடா்கள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், சாமியாா் குா்மீத் ராம் ரஹீமுக்கு 2017-ஆம் ஆண்டு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல ஊடகவியலாளா் ஒருவா் கொல்லப்பட்ட வழக்கில், 2019-ஆம் ஆண்டு ராம் ரஹீம் உள்பட 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஹரியாணாவில் உள்ள ரோத்தக் பகுதி சிறையில் ராம் ரஹீம் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு அண்மையில் 20 நாள்கள் பரோல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு பஞ்சாபில் ராம் ரஹீமுக்கு எதிராக சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் பிற சீக்கிய மதத் தலைவா்களை இழிவுபடுத்தியது உள்பட 3 மத நிந்தனை வழக்குகளை காவல் துறை பதிவு செய்தது.
இதுதொடா்பாக ராம் ரஹீம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம், அவருக்கு எதிரான அந்த வழக்குகளின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக பஞ்சாப் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ராம் ரஹீமுக்கு எதிரான மத நிந்தனை வழக்குகள் குறித்த விசாரணைக்கு உயா்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா்.